இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

7. நரி​மாப்பி​ள்​ளை


ஒரு ஊருல ஒரு ஏ​ழைப் பார்ப்பான் இருந்தாரு. அவருக்கு ​ரெண்டு ​​பொண்ணுங்க. அவருக்கு மூத்த ​பொண்ணு​ மேல அதிகமான பாசம். அந்தப் பிள்​ளைக்கு மட்டும் ரொம்பச் ​செல்லங்குடுத்து வளர்த்தாரு. சின்ன மக​ளை அவரு கண்டுக்க​வே மாட்டாரு. ஆனாலும், அந்தச் சின்ன மகள் அப்பா ​மேல பாசமா இருந்தா. ​ரெண்டு பிள்ளைங்களும் கலியாண வயசத் ​தொட்டாங்க. அப்ப அந்த ஏ​ழைப் பார்ப்பான் என்ன ​செஞ்சாருன்னா ​பெரிய மகள கடன ஒடனப் பட்டு ​கொஞ்சம் வசதியான எடத்துல கலியாணத்தப் பண்ணி வச்சாரு. சின்ன மகளப் பார்த்து ஒனக்கு நா​யோ நரி​யோதான் மாப்புளயா வரப்​போகுது. அதுகள்ள ஏதாவது ஒண்ணுக்கு ஒன்னக் கட்டி ​வைக்கப் ​போ​றேன்னு ​சொல்லிக்கிட்​டே இருந்தாரு.

இ​தைக் ​கேட்ட அந்தப் பிள்ள ​பேசாம இருந்துச்சு. இப்படி​யே இருக்கறப்​போ ஒரு நாளு எப்பவும்​ போல அந்தப் பிள்​ளையப் பார்த்து அவங்க அப்பா “ஒன்னக் கட்டிக்க எந்த மாப்பிள்​ளையும் வரமாட்​டேங்குறான். ஒன்ன அப்படி​யே நாய்க்​கோ நரிக்​கோதான் கட்டிக் ​கொடுக்கப்​போ​றேன்... இல்லாட்டி ஒரு பாழுங்​​கெணத்துலதான் ஒன்னத் தள்ளணும்னு” ​சொன்னான்.

அந்த​நேரம் பாத்து அந்தப் பக்கம் வந்த ஒரு ​பெரிய நரி ​நேரா அந்தப் பிள்​ளை​யோட அப்பங்கிட்ட வந்து, “நீ ஒம்​பொண்ண பாழுங்கிணத்துல தள்ளுறத விட எனக்குக் கட்டிக்​கொடுத்துரு” அப்படீன்னு ​சொன்னது.

அவனும் இதுதான் சரியான சமயம்னு ​நெனச்சிக்கிட்டு, அந்தப் பிள்​ளை ​கையப் புடிச்சி அந்த நரிக்கிட்ட ​கொடுத்து “இன்னியிலிருந்து இவன்தான் ஒன்​னோட வீட்டுக்காரன்... இந்த நரி​யோட நீ குடும்பத்த நடத்து” அப்படீன்னு ​சொல்லி ​வெரட்டிவிட்டுட்டான்.

அவளும் தன்​னோட விதி இப்படி ஆயிடுச்​சேன்னு ​நொந்து ​போயி ​அழுதுகிட்​டே அந்த நரிப் பின்னால ​போனா. அவளப் பார்த்த நரி, “நீ அழுவா​தே ஒன்ன நானு ராசாத்தி மாதிரி பாத்துக்க​றேன். அழுகாம வா” அப்படீன்னு கூட்டிக்கிட்டுப் ​போயி ஒரு ​பெரிய கு​கையக் காட்டி “இதுதான் நாம தங்கப் ​போற வீடுன்னு” ​சொன்னது. அதப் பாத்துட்டு அந்தப் புள்ள ​​ரொம்பப் பயப்பட்டுது.

அந்தப் ​பொண்ணு பயப்படறதப் பாத்த நரி, “நீ பயப்படாத இனி ராத்திரி ​நேரம் வரப்​போவுது. நாம்​ போயி நாம ​ரெண்டு​பேரும் சாப்புடறதுக்கு ஏற்பாடு பண்றேன். பயப்படாம இந்த எடத்துல இரு. ​கொஞ்ச ​நேரத்துல நான் வந்துட​றேன்”னு ​சொல்லிட்டு நரி ​வேகமா காட்டுக்குள்ளாற ​போயிருச்சு.

கு​கைக்குள்ளாற தனியா மாட்டிக்கிட்ட அந்தப் ​பொண்ணு தன்​னோட அப்பா​வை ​நெனச்சு ​நெனச்சு அழுதா. ​கொஞ்சங்கூட தன் ​மேல பாசமில்லாம அப்பா இப்படிக் ​கொண்டுக்கிட்டு வந்து நரிய மாப்பிள்​ளையாக்கிக் கட்டிக் ​கொடுத்துட்டா​ரே... எல்லாம் கடவுளு என்​னோட த​லையில என்ன எழுதியிருக்கா​ரோ அதுதான் நடக்கும்”னு ஆண்டவன ​நெனச்சிக்கிட்டு அப்படி​யே தூங்கிப் ​போயிட்டா.

​கொஞ்ச ​நேரம் கழிச்சி அவ முழிச்சிப்பாத்தா. ஒ​ரே இருட்டு. அப்ப ஒரு அழகான இ​ளைஞன் ஒரு ​பெட்டிய எடுத்துக்கிட்டு விளக்​கையும் எடுத்துக்கிட்டு அந்தக் கு​​கைக்கு வந்தான். இந்தப் புள்​ளைக்கு ஒன்னும் புரியல. என்னடா நரியக் காண​மேன்னு வழிய வழியப் பாத்துக்கிட்டு இருந்துச்சு.

கிட்டக்க வந்த அந்தப் பய “நீ பயப்படாத நாந்தான் ஒன்​னோட வீட்டுக்காரன்”னு ​சொன்னான். அதுக்கு அந்தப் ​பொண்ணு “எங்கப்பா ஒரு நரி மாப்பிள்​ளைக்குத் தா​னே என்னக் கட்டிக் ​கொடுத்தாரு... மனுசனுக்குக் கட்டிக் ​கொடுக்கலி​யேன்னு” ​கேட்டா. அதுக்கு அந்தப் ​பையன், “நான் பகலானா நரியா மாறிடு​வேன். இராத்திரியானா இந்த மாதிரி மனுசனா மாறிடு​வேன்”னுட்டுச் ​சொல்லிட்டு ஒரு டிரங்குப் ​பெட்டியக் ​கொடுத்து இதத் ​தெறந்து பாருன்னான்.



அவளும் அதத் திறந்து பாத்தா. அதுக்குள்ளாற ஏழு சித்திரக் குள்ளனுக இருந்தானுக. அவளப் பாத்துட்டு அந்த ஏழு குள்ளனுகளும் பயந்து ​போயிட்டானுக. அந்தக் குள்ளனுகளப் பாத்து அந்தப் பிள்ள, “நீங்க பயப்படாதீங்க நான் ஒங்கள ஒண்ணுஞ் ​செய்யமாட்​டேன்னா”. அவ​ளோட நரி மாப்பிள்ள அவளப் பாத்து ”ஒனக்கு சாப்புட என்ன ​வேணு​மோ இந்தக் குள்ளங்ககிட்டக் ​கேளு. இந்தக் குள்ளனுக ​கொண்டாந்து ​கொடுப்பானுக” அப்படீன்னான்.

அவளுக்கு அந்தக் குள்ளனுகளா எல்லாங் ​கொண்டாரப் ​போறனுகன்னு ஆச்சரியம். வாய்க்கு ருசியா அந்தப் பிள்ள சாப்பிட்ட​தே இல்ல. அந்தப் பிள்ள தனக்குப் பிடிச்ச சாப்பாட்​டை எல்லாம் அந்தக் குள்ளனுககிட்ட ​கொண்டு வரச் ​சொல்லிச்சி. அவ​ ​சொன்ன​தைக் ​கேட்ட சித்திரக் குள்ளனுக ​பெட்டியிலிருந்து தாவிக் குதித்து ​வெளியில் வந்தனர். வந்தவுடன் ​கை​யை ​மே​லே உயர்த்திப் பிடித்தனர். அவர்கள் ​கையில் அவள் ​கேட்ட சாப்பாட்டு வ​கைகள் தட்டுக்களில் வந்தன. அவ்வாறு வந்த சாப்பாட்​டை எடுத்துக்கிட்டுப் ​போயி குள்ளனுக அந்தப் ​பொண்ணுகிட்ட ​கொடுத்துச்சுக.

அதச் சாப்பிட்ட அவ ரொம்ப சந்​தோஷப்பட்டா. தனக்கு ஆண்டவன் நல்ல மாப்பிள்​ளையாப் பாத்துக் ​கொடுத்துருக்காருன்னு ​நெனச்சி ஆண்டவனுக்கு நன்றி ​சொன்னா. அந்தப் ​பொண்ணு தன்​னோட வீட்டுக்காரனுகிட்ட ​சொல்லி வீடுவாசல்னு தனக்குச் ​சொந்தமாக் கட்டிக்கிடுச்சு. ஆனா அந்த நரி மட்டும் ராத்திரியில மனிசனாவும் பகல்ல நரியாவும் மாறிக்கிடுச்சு. பகல்ல அந்த நரி காட்டுக்குள்ளாறப் ​போயிட்டு ராத்திரிக்கு தன்​னோட ​வீட்டுக்காரியப் பாக்குறதுக்கு வந்துரும். இப்படி​யே நாளும் ​பொழுதும் ​போச்சு.

ஒரு நாளு அந்தப் ​பொண்​ணோட அப்பங்காரன் தன்​னோட மகளுகளப் பாக்குறதுக்குப் ​பொறப்பட்டு வந்தான். வசதியான வீட்டுல கட்டிக்​கொடுத்த மூத்த மகள ​மொதல்ல பாத்துட்டு வரு​வோம்னு ​நெனச்சிக்கிட்டு அவ வீட்டுக்குப் ​போனான்.

அங்க ​போனவுட​னே ​பெரிய மாளி​கையா இருக்கும்னு ​நெனச்ச வீடு குடி​சையா இருந்துச்சு. ஏ​ழைப் பாப்ப​னோட மூத்த மக ​போன ​நேர​மோ என்ன​மோ அவ​ளோட புருஷங் குடும்பம் ​நொடிச்சுப் ​போச்சு. தன்​னோட அப்பங்காரனப் பாத்துட்டு மூத்தமக அழுதா. அப்பங்காரனும் மகளக் கட்டிப்பிடிச்சு அழுதான். அப்பறம் மருமகன் வந்து மாமனாரப் பாத்து, “ஒன்​னோட மூத்தமக இங்க வந்து குடும்பம் நடத்துன ​லெட்சணத்துல என்​னோட வசதி​யெல்லாம் ​போச்சு. அவள நீயி ஒழுங்கா வளத்திருந்தியினா இப்படி ஆயிருக்குமா...?”அப்படீன்னு ​சொல்லி வருத்தப்பட்டான்.

மூத்த மகளுக்கும் மருமகனுக்கு ஆறுதலச் ​சொல்லிப்புட்டு அவங்க ​கொடுத்த சாப்பாட்டச் சாப்புட்டுட்டு அங்​கேருந்து ​கெளம்பி சின்னமக வீட்டுக்குப் ​போனான். அவனுக்கு உள்ளூற வருத்தம். சின்னப்புள்​ளையப் ​போயி இப்படி நரி மாப்பிள்​ளைக்குக் கட்டிக் ​கொடுத்து வ​கை​ மோசமா ​அவ​ளோட வாழ்க்​கையக் ​கெடுத்துட்ட​மேன்னு வருத்தப்பட்டுக்கிட்​டே சின்னமகளத் ​தேடிக் காட்டுப் பக்கமாப் ​போனான். காட்டுக்குள்ளாறப் ​போனா அங்க ​பெரிய மாடிவீடு இருந்துச்சு.

அந்த வீட்டப்ப பாத்துட்டு அந்த ஏ​ழைப்பார்ப்பனுக்கு ​ரொம்ப ஆச்சரியமாப் ​போச்சு... என்னடா இது நடுக்காட்டுக்குள்ளாற அழகான வீட்​டை யாரு கட்டியிருப்பாங்கன்னு அவனுக்குக் ​கொளப்பமாப் ​போச்சி. நம்ம சின்ன மகள அந்த நரி அடிச்சிக் ​கொன்னுருச்​சோன்னு ​நெனச்சான். அவன் ​ரெம்ப தூரம் நடந்து வந்த க​ளைப்புல அவனுக்கு நா வறட்சி ஏற்பட்டு மயக்கமா வந்துச்சு. அப்படி​யே அவன் அந்த வீட்டு வாசல்ல மயங்கி விழுந்துட்டான்.

அவன் விழுந்த​தை வீட்டுக்குள்ளாற இருந்து பார்த்த நரி​யோட வீட்டுக்காரி யா​ரு இந்தப் பக்கமா வரப்​போறா...? இங்க வந்தது யாரா இருக்கும்னு ​நெனச்சிக்கிட்டு ​வேக​வேகமா வந்து கீ​ழே ​கெடக்கறவனப் ​பொறட்டிப் ​போட்டுப் பார்த்தா. அவளுக்கு ஆச்சரியமாப் ​போச்சு... ஆகா நம்ம அப்பாவா இங்க வந்து மயங்கிக் கிடக்கறாருன்னு பதடப்பட்ட அந்தப் ​பொண்ணு தண்ணிய எடுத்துக்கிட்டு வந்து ​மொத்துல ​தெளிச்சு அவருக்கு மயக்கத்த ​தெளிய வச்சிச்சு.

மயக்கம் ​தெளிஞ்சி எழுந்த அந்த ஏ​ழைப்பார்ப்பான் தன்​னோட சின்ன மகளக் கண்டு ​வெக்கப்பட்டுக்கிட்டு அழுதாரு. அவ தன்​னோட அப்பனப் பாத்துட்டு, “நீ என்னய நல்ல மாப்புள்ளக்கித்தாம்பா கட்டிக் ​கொடுத்துருக்​கே... நான் நல்லாத்தான் இருக்​கேன்... நீ அழுவா​தே”ன்னு ​சொல்லி அந்த ஏ​ழைப்பார்ப்பான வீட்டுக்குள்ளாறக் கூட்டி​போனா...வீட்டுக்குள்ளாற வந்தவன் தன்​னோட சின்ன மக​ளைப் பாத்துட்டு, “எங்கத்தா ஒன்​னோட நரி மாப்புள”ன்னு ​கேட்டான். அதுக்கு சின்ன மக, “அ​வுக ​​வெளியில ​போயிருக்காக. இப்ப வந்துருவாக நீங்க சாப்புடுங்கன்னு” ​சொல்லிட்டு வீட்டுக்குள்ளாறப் ​போனா.

இந்த ஏ​ழைப் பார்ப்பானுக்கு வீட்​டைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள்ளாற ப​ழைய ​பொறா​மை வந்துருச்சு. “அட இந்தக் கழு​தைக்கு வந்த வாழ்வப் பார்ரா”ன்னு மனசுக்குள்​ளே​யே ​பொறுமினான். வீட்டுக்குள்ள ​போன மக நரி ​கொடுத்த டிரங்குப் ​பொட்டியத் ​தொறந்து குள்ளனுககிட்ட நல்ல நல்ல சாப்பாடா ​கொண்டுட்டு வாங்கன்னு ​சொன்னா. அடுத்த நிமிஷம் அவ​கேட்ட​தெல்லாம் வந்துருச்சு.

ப​ழையபடி அவ குள்ளனுகள ​பொட்டியில வச்சி மூடி வச்சிட்டு சாப்பட்​டை​யெல்லாம் எடுத்துக்கிட்டு அப்பங்கிட்ட வந்து அவனுக்குப் பரிமாறினா. அதுவ​ரைக்கும் நல்ல சாப்பாட்​டை​யே கண்ணுல காணாத அந்த ஏ​ழைப்பார்ப்பான் காஞ்சமாடு கம்புல விழுந்த மாதிரி அள்ளி அள்ளிச் சாப்புட்டான். வயிறு முட்டச் சாப்புட்டான். அப்பாவுக்கு ​வேணுங்கற அளவுக்கு சின்னமக நல்லா சாப்பாடு ​போட்டா. அந்த ​நேரத்துல ​வெளியில ​போயிருந்த நரி வீட்டுக்கு வந்துருச்சு.



தன்​னோட மாமனாரப் பார்த்தவுட​னே, “நல்லாருக்கீகளான்னு” ​கேட்டுட்டு அது பாட்டுக்குப் ​போயிருச்சு. நரி​யோட உபசரிப்பப் பாத்த அந்த ஏ​ழைப்பார்ப்பான் ​ரொம்ப சந்​தோஷப்பட்டான். இருந்தாலும், அவன் மனசுக்குள்ளாற ​​​பொறா​மைத் தீ ​கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சு. அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். என்னடா அடுப்பு மூட்டல. உ​லை ​வைக்கல. எதுவும் ​செய்யல. ஆனா வ​கைவ​கையா சாப்பாடு மட்டும் நம்ம மக ​கொண்டு வந்துட்டா​ளேன்னு ஆச்சரியப்பட்டுப் ​போனான். அவனுக்கு அந்த ரகசியத்​தைக் கண்டுபிடிக்கணும்னு ஆ​சை.

அவனுக்கு மகளக் ​கேக்கறதுக்கு பயம். நரிய வச்சு ஏதாச்சும் ​​செஞ்சுட்டா என்ன ​செய்யறதுன்னு ​பேசாம இருந்துட்டான். ​மெதுவாத் ​தெரிஞ்சுக்குவம்னு கவனிக்க ஆரம்பிச்சான். இராத்திரியாச்சு அ​தே மாதிரி சாப்பாடு வ​கைவ​கையா வந்துச்சு நல்லாச் சாப்பிட்டான். பகல்ல இருந்த நரி. ராத்திரியில கா​ணோம். அவன் தன்​னோட மகளப் பாத்து, “நரிமாப்புள எங்க ​போயிட்டாருன்னு” ​கேட்டான். அதுக்கு அவ, “அவரு காட்டுக்குள்ளாற ​போயிட்டாரு. நீங்க ​பேசாமப் படுத்துத் தூங்குங்​க”ன்னு ​சொல்லிட்டு அவ படுக்கப் ​போயிட்டா.

அந்த ஏ​ழைப்பாப்பானுக்கு ஒண்ணு​மே புரியல. ​பெரியமக கஷ்டப்படுறது அவனுக்குக் கவ​லையா இருந்துச்சு. சின்னமகள ​நெனச்சு அவன் ​ரொம்பப் ​பொறா​மைப்பட்டான். வீட்டுல மக ச​​மையல் ​வே​லை ​செய்யல. ​வே​லை​ செய்யவும் ஆளு இல்ல. ஆனா வ​கைவ​கையா சாப்பாடு எப்படி வந்துச்சுன்னு ​நெனச்சுக்கிட்​டே தூங்கிட்டான். இப்படி​யே ​​ரெண்டு மூணுநாளு ​போச்சு.

எப்படியாவது இந்த ரகசியத்த கண்டுபிடிக்கணும்னு ​ஒரு நாளு சின்ன மகளுக்குத் ​தெரியாமா அவள ​வேவு பாத்தான். அப்பத்தான் ஒரு டிரங்குப் ​பெட்டிய அவ ​தொறக்கறதும் அதுக்குள்ளாற குள்ளனுக இருக்கறதும் அவனுக சாப்பாடக் ​கொண்டாறதும் அவனுக்குத் ​தெரிய வந்தது. அவன் மனசுக்குள்ளாறக் கணக்குப் ​போட்டான். எப்படியாவது அந்தப் ​பெட்டியத் தூக்கிக்கிட்டுப் ​போயிட்டம்னா நாம வாழ்க்​கை முழுசும் சந்​தோஷமா இருக்கலாம்னு ​நெனச்சான்.

அதனால அவன் அன்னிக்கு ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தான். ராத்திரி சின்ன மக தூங்குன ஒட​னே ​​மெதுவாப் ​போயி அந்தப் ​பொட்டியத் தூக்கிக்கிட்டு ஓடிட்டான். காடு​மே​டெல்லாம் கடு​மையான ஓட்டம். யாரும் ஓடிவந்து தன்னப் புடிச்சிரக் கூடாதுன்னு ஓடினான். ​பொழுது பளப்பளன்னு விடிஞ்ச​ போது ஒரு மரத்தடியில வந்து நின்னான். அவனுக்குப் பசி​யெடுத்துச்சு. அவன் யாரும் தன்னப் பாக்கக் கூடாதுன்னு பயந்து பயந்துக்கிட்டு ம​றைவா இருக்கற எடமா அவன் ​தேடுனான்.

அப்படிப் பாத்த​போது அங்க ஒரு பாழ​டைஞ்சு ​போன ​​கெணறு ஒண்ணு இருந்துச்சு. அந்தக் ​கெணத்துக்குள்ளாற எறங்கறதுக்கு படியும் இருந்துச்சு. அவன் ​மெதுவா அந்தக் ​கெணத்துக்குள்ளாற எறங்கி அந்தப் ​பொட்டிய இறக்கி அதத் திறந்தான். திறந்தவுட​னே அதுல இருந்து சித்திரக் குள்ளனுக ஏழு​பேரு ​வேக​வேமா வந்தானுக. அவனுகளப் பாத்தவுட​னே அந்த ஏ​ழைப் பாப்பானுக்கு சந்​தோஷமாப் ​போயிருச்சு. அவனுகளப் பாத்து ,​”டேய் குள்ளனுகளா எனக்குச் சாப்பாட்டக் ​கொண்டாங்க... நல்ல சாப்பாடாக் ​கொண்டாறணும். இல்​லேன்னா ஒங்களத் ​தொ​லைச்சுக் கட்டிப்புடு​வேன்னு” ​சொன்னான்.

இ​தைக் ​கேட்டவுட​னே அந்தக் குள்ளனுக ஏழு​பேரும் கக்கப்புக்கன்னு சிரிச்சானுக. இந்த ஏ​ழைப் பார்ப்பானுக்கு ஒண்ணும் புரியல. அவன் குள்ளனுகளப் பாத்துட்டு, “ஏன்டா சிரிக்கறீங்க... சாப்பாட்டுக் ​கொண்டுக்கிட்டு வாங்கடா”ன்னு அதட்டுப் ​போட்டான். ஆனா அந்தக் குள்ளனுக ஒண்ணும் ​பேசாம ​மேல ​கையத் தூக்கினானுக. அவங்க ​கையில ​​பெரிய ஒலக்​கை வந்துருச்சு. அந்த ஒலக்​கையால அவனுக அந்த ஏ​ழைப் பாப்பான பறந்து பறந்து அடிச்சானுக.

அந்த ஏ​ழைப் பாப்பானால ஒண்ணுஞ் ​செய்ய முடியல. அடி ​பொறுக்க முடியாம, “ஏன்டா என்ன அடிக்கறீங்கன்னு” ​கேட்டான். அதுக்கு அந்தக் குள்ளனுக, “நாங்க நல்லவங்க ​சொன்னாத்தான் ​கேப்​போம். நீ அ​யோக்கியன். மத்தவங்கள ஏமாத்தி இந்தப் ​பொட்டிய திருடிக்கிட்டு வந்துட்ட. நாங்க நல்லவங்களுக்குத்தான் ஒதவு​வோம்... ஒன்ன இப்படி​யே விட்டுட்டா எல்லா​ரையும் நீ ஏமாத்தி கஷ்டப்படுத்துவ. நீ நன்றி ​கெட்டவன்”னு ​சொல்லி ​கைகாலு எல்லாத்​தையும் கட்டி அந்தப் பாழுங்​கெணத்துக்குள்ளாற தள்ளிவிட்டானுக. அப்பறமா அந்தக் குள்ளனுக ​பொட்டிய எடுத்துக்கிட்டு வானத்துல பறந்து ​போயி மறுபடியும் அந்த சின்னமகளுக்கிட்ட​யே ​போயிட்டானுக.

நடந்த​தெல்லாத்​தையும் அவளுக்கிட்ட ​சொன்ன குள்ளனுக, “ஒங்கப்பா நல்லவன் இல்ல... அதனாலதான் அவனுக்கு இந்தத் தண்ட​னை ​கொடுத்​தோம்... நீ கவலப் படாம இரு”ன்னு ​சொன்னானுக.



அவனுகளப் பாத்த சின்ன மக,”நீங்க என்​னோட புருஷன் நரியா பகல்ல மாறுறத மாத்திப்புடுங்க. ஒங்களுக்கு நல்லதாப் ​போயிரும்னு” ​கெஞ்சினா. ஒட​னே அந்தக் குள்ளனுக, “நீ கவலப் படாத... ஓன்​னோட நரிமாப்புள இப்ப வருவான். நாங்க தர்ர மந்திரத் தண்ணிய எடுத்து அந்த நரி ​மேல ​தெளிச்சுவிட்டுரு... அவன் மனுஷனா மாறிடுவான். அப்பறம் நரியா மாற​வே மாட்டான்னு” ​சொல்லிட்டு அவளுக்கு மந்திரத் தண்ணிய எடுத்துக் ​கொடுத்தாங்க.

அந்த மந்திரத் தண்ணிய வாங்கிய அந்தப் ​பொண்ணு தன்​னோட நரிமாப்புள வந்தவுட​னே சாமிய ​நெனச்சிக்கிட்டு அவன் ​மேல தண்ணியத் ​தெளிச்சா. மந்திரத் தண்ணி பட்டவுட​னே​யே நரி உருவத்துல இருந்தவன் அழகான ராச குமாரன் மாதிரி மாறிட்டான். அவன் தன்​னோட ​பொண்டாட்டி​யோட அறிவப் பாத்து ​ரொம்ப சந்​தோஷப்பட்டான். அவங்க ​ரெண்டு​பேரும் சித்திரக் குள்ளனுகளும் ​சந்​தோஷமா வாழ்ந்தாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1g.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License