இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

15. வாலு போயி கத்தி வந்தது...


ஊருக்குள்ள சில பேரு ஏமாத்தியே பிழைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஏமாத்துறவங்க எப்படியாவது அடுத்தவங்கள ஏமாத்திக்கிட்டே இருப்பாங்க. ஏமாறுறவங்க ஒண்ணும் புரியாம ஏமாந்துகிட்டே இருப்பாங்க. இப்படி ஏமாத்துறவங்கள குள்ளநரித்தனம், நரித்தனம் பண்றான்னு சொல்வாங்க. இந்த நரிய வச்சும் ஒரு கத இந்தப் பக்கத்துல வழக்குல வழங்கி வர்றது...

ஒரு விவசாயி கஷ்டப்பட்டு வயல்ல உழுது வெள்ளரி வெதையப் போட்டு பாடுபட்டு அதப் பாதுகாத்துக்கிட்டு வந்தான். வெள்ளரியும் நல்லாக் கொடியோடிப் பூவும் பிஞ்சுமா இருந்துச்சு. விவசாயிக்கு நல்ல மகிழ்ச்சி. அடடா நாம பாடுபட்டதுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகுதுன்னு. தெனமும் அவன் வயலுக்கு வந்து அதப் பாத்துப்புட்டுப் போவான்.

வெள்ளரிப் பிஞ்சு காயாச்சு. நல்ல நல்ல காய்களா வெள்ளரிக்கொடியில காய்ச்சிருந்தது. விவசாயி அதப் பிடுங்கி நல்ல விலைக்கு வித்தான். வெள்ளரிக் கொடியில நெறயக் காயிக இருந்ததால அவன் ராத்திரியில வந்து காவக்காத்துக்கிட்டு இருப்பான். பகல்ல வயல்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்குப் போயிருவான்.

இப்படியே இருந்தான் விவசாயி. ஒரு நாளு அந்தப் பக்கம் ஒரு நரி வந்தது. வெள்ளரித் தோட்டத்தப் பாத்துச்சு. விவசாயி இல்லாத நேரம் பாத்து மெதுவா அந்த நரி தோட்டத்துக்குள்ளாறப் போயிருச்சு. அங்க பாத்தா வெள்ளரிப் பழம் ஒரு பக்கம், காயிக ஒரு பக்கம்னு நல்லா கொடியில கெடந்துச்சு.

இந்த நரிக்கு இந்த வெள்ளரிப் பழத்தைத் திங்கனும்னு ஆசை. அதனால ராத்திரி நேரத்துல மெதுவா வந்து விவசாயி அசந்து தூங்குறபோது வெள்ளரிப் பழத்தத் தின்னுட்டு அப்படியே வெளிய இருந்து வச்சிட்டு குண்டிய ஒரு வெள்ளரிக்காயில தொடச்சிப்புட்டு வந்துரும்.

இப்படியே ரெம்ப நாளு நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு நா விவசாயி காயி பழங்களப் புடுங்கயில இதப் பாத்துட்டான். இப்படி தோட்டத்துக்குள்ளாற வந்து யாரு செய்யிறதுன்னு அவனுக்குப் புரியல. இதக் கண்டுபிடிக்கணும்னு நெனச்சுக்கிட்டு அவன் ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தான்.

அப்ப இந்த நரி மெதுவா தோட்டத்துக்குள்ளாற வந்து பாத்தது. விவசாயி தூங்குற மாதிரி நடிச்சான். இந்த நரி விவசாயி நல்லாத் தூங்குறான்னு நெனச்சிக்கிட்டு முன்னாடி செஞ்சமாதிரியே பழத்தத் தின்னுட்டு வெளியயும் இருந்துட்டு குண்டிய ஒரு வெள்ளரிக்காயில தொடச்சிப்புட்டு ஓடிடுச்சு. இதப் பாத்துக்கிட்டே இருந்த விவசாயி அட ஒரு நரி வந்து இப்படி செஞ்சிட்டுப் போகுது. அத எதாவது பண்ணணும்னு நெனச்சிக்கிட்டு மறுநாளு கொல்லம்பட்டறைக்குப் போயி பதமான கத்தியா நாலஞ்சு வாங்கிக்கிட்டு வந்து நாலஞ்சு வெள்ளரிக்காயில பதிச்சு வச்சிட்டுப் போயி ராத்திரியில தூங்குற மாதிரிப் படுத்துக்கிட்டான்.

விவசாயி நெனச்சது மாதிரியே நரி தோட்டத்துக்குள்ளாற வந்தது. தோட்டத்துக்குள்ளாற வந்துட்டு வெள்ளரிப் பழத்தைத் தின்னுட்டு வெளிய போயிட்டுக் குண்டிய வெள்ளரிக்காயில தொடச்சிச்சு. விவசாயி மறச்சி வச்சிருந்த கத்தி நரியோட குண்டியப் பதம் பாத்துருச்சு. நல்லா சதக்குன்னு மாங்காயப் பிளக்கற மாதிரி நரியோட குண்டிய கத்தி நறுக்கிடுச்சு. ரத்தம் வடிய வடிய நரி தப்பிச்சோம் பிழைச்சோம்னு தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு.



நரியால எங்கயும் நகர முடியல. கத்தி குண்டிய நறுக்குனதால ஒரு எடத்துலயே மொடங்கிடுச்சு. நரி அந்தக் காயத்துக்கு மருந்து வச்சிக் கட்டாததால சலம் புடுச்சிக்கிடுச்சு. நரி மெதுவா மெதுவா ஊருக்குள்ளாறப் போயி ஊருக்கு வெளியில இருந்த சட்டிபான செய்யிறவனோட குடிசைக்குப் போயி அவனுக்குத் தெரியாம ஒரு சின்ன மண் கலயத்தைக் களவாண்டுக்கிட்டு ஓடியாந்துருச்சு.

கலயத்தைக் களவாண்டுக்கிட்டு ஓடியாந்த நரி சீழ் வச்ச தன்னோ குண்டியில இருக்கற புண்ண முள்ளாள கீறி சலத்த அந்தக் கலயத்துல புடுச்சிச்சு. கலய ரெம்புன ஒடனே அத ஒரு துணியால மூடி வேடுகட்டி தலையில தூக்கி வச்சிக்கிட்டு மொகத்த மூடிக்கிட்டு ஊருக்குள்ளாறப் போயி ‘‘நெய்யி வேணுமா நெய்யின்னு’’ வித்துக்கிட்டுப் போச்சு.

ஊருல இருந்த ஒரு ஆளு, ‘‘ஆமா எனக்கு நெய்யி வேணும் என்ன வெல சொல்றன்னு’’ கேட்டாரு. அதுக்கு அந்த நரி இது சுத்தமான நெய்யி... இதுக்கு ஒரு ரூபா கொடுங்கன்னு’’ சொன்னது. அதுக்கு அந்தாளு இந்த நரி ஏமாந்த நரி நாம கேட்ட வெலக்கு இந்த கலயத்தோட நெய்யத் தருதுன்னு நெனச்சிக்கிட்டு ஒரு ரூபாயக் கொடுத்துட்டு நரிக்கிட்ட இருந்து அந்தக் கலயத்த வாங்கிட்டுப் போனாரு.

பணத்த வாங்குன நரி சந்தோஷமா இந்த ஆளு நல்லா ஏமாந்துட்டான்னு வேகவேகமா அங்க இருந்து மெதுவாப் போச்சு. கலயத்த வாங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளாறப் போன அந்த ஆளு துணியால கட்டியிருந்த வேட்டைப் பிரிச்சி மோந்து பாத்தான். ஒரே சல(சீழ்) நாத்தம். அவனுக்கு வாந்தி வந்துருச்சு. அவன் பொண்டாட்டி அவன நல்லாத் திட்டினா. கலயத்த வாங்குன ஆளு ஆகாக இந்த நரி நம்மள ஏமாத்திருச்சு அந்த நரியப் புடுச்சி நல்லா ரெண்டு போடுபோட்டு காச வாங்குனாத்தான் நமக்கு நிம்மதின்னு நெனச்சிக்கிட்டு அந்தக் கலயத்தையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு மாவேகம் மழைவேகமாப் போனான்.

அந்த நரி மனிசன நல்லா ஏமாத்திப்புட்டோம்னு நெனச்சிப் பாடிக்கிட்டு சந்தோஷமாப் போயிக்கிட்டு இருந்துச்சு. சலத்தை நெய்யின்னு வாங்குனவன் கோபந் தலைக்கு ஏற அந்த நரிய வெரட்டுனான். நரியும் ஆகா இவன் கத்திய எடுத்துக்கிட்டுள்ள நம்மள வெரட்டுறான். நம்மளக் கொல்லப் போறானேன்னு நெனச்சிக்கிட்டு ரெம்ப வேகமா ஓடுச்சு.

வேகமா ஓடிப்போயி தப்படிக்கிறவன் வீட்டுக்குள்ளாற நுழையப் போச்சு அவன் அந்த நரிய வெரட்டுனான். அவங்கிட்டருந்து தப்பிச்ச நரி அவனோட தப்பத் தூக்கிக்கிட்டு ஓடுச்சு. அதப்பாத்த அந்த தப்புக்காரன் நரிய வெட்டுறதுக்கு அரிவாளத் தூக்கிக்கிட்டு வெரட்டுனான்.

நரி திரும்பிப் பாத்தது. ஒரு பக்கம் ஏமாந்தவனும் இன்னொரு பக்கம் தப்புக்காரனும் வெரட்டுறதைப் பாத்துட்டு தப்பத் தூக்கி எறிஞ்சிட்டுத் தலைதெறிக்க ஓடுச்சு. தப்புக்காரன் கீழ கெடந்த தப்பத் தூக்கிக்கிட்டுத் திரும்பப் போயிட்டான். அவனுக்கு முன்னால வேகமா நரியத் தொரத்துன ஏமாந்தவன் தன்னோட கையில இருந்த கத்திய சுழற்றி நரியக் குறிவச்சு எறிஞ்சான்.



கத்தி நரியோட வால அடியுறுக வெட்டிருச்சு. ரத்தம் வழிய வழிய அந்தக் கத்தியையும் நரி தூக்கிக்கிட்டு வேகமா ஓடி காட்டுகுள்ளாறப் போயிருச்சு. ஏமாந்தவன் அந்தக் கலயத்தைப் போட்டு ஒடைச்சிட்டு நரியத் தேடுனான். காட்டுக்குள்ளாற அவனால நரியக் கண்டுபிடிக்க முடியல வெகுநேரம் தேடிட்டு அவன் வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டான்.

சலத்த நெய்யின்னு நெனச்சி வாங்கி ஏமாந்தவன் போன பின்னாடி பொதருக்குள்ளருந்து வெளியில வந்த நரி காயத்துக்கு நல்ல மருந்தாப் பாத்துக் கட்டிக்கிட்டு வாலுப் போயி கத்தி வந்தது டும்டும்டும். வாலுப் போயிக் கத்தி வந்தது டும்டும்டும்னு சொல்லிக்கிட்டே தன்னோ இருப்பிடத்துக்குப் போயிருச்சு. அதுலருந்து நரி தான் இருந்த காட்ட விட்டு வெளிய வர்றதே இல்ல. வெளியே போன மனுசங்க தன்னக் கொன்னுடுவாங்கன்னு காட்டுக்குள்ளேயே நரி தங்கிடுச்சு.

மத்தவங்கள ஏமாத்துற நரிக்கதையச் சொல்லிச் சொல்லி ஏமாறவும் கூடாது. ஏமாற்றவும் கூடாதுங்கறதுக்கு இந்தக் கதைய இன்னக்கி வரைக்கும் புதுக்கோட்டை வட்டாரத்துல மக்கள் சொல்லிக்கிட்டு இருக்கறாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1o.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License