இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

16. எடுத்து வச்சிருந்தாலும் கொடுத்து வச்சிருக்கணும்!


எல்லாத்துக்கும் எதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும். அதுலயும் எல்லாக் காரியமும் விதிப்படிதான் நடக்கும். விதி மிஞ்ச ஆளு இல்லன்னும் சொல்வாங்க. நாம நெனக்கிறது ஒண்ணாவும் நடக்கறது வேறயாவும் இருக்கும். எதெது எப்படி நடக்கும்னு விதிதான் தீர்மானிக்குது. இந்த விதியப் பத்தி புதுக்கோட்டை மாவட்டத்து மக்களுக்கிட்ட இன்றைக்கும் ஒரு கத வழங்கி வருது.

வீட்டுக் கூரைய மேயிறவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு தெனந்தோறும் ஊருக்குள்ளாற எந்தக் கூரைவீடாவது ஒழுகுச்சுன்னாலோ அல்லது புதுசா கூரை மேயனும்னாலோ வேலைக்குப் போயிருவாரு. தெனந்தோறும் வேலை பாத்துட்டு வந்தாத்தான் அவருக்குச் சாப்பாடு கிடைக்கும். இல்லைன்னா அவரும் அவரு வீட்டுல உள்ளவங்களும் அன்றைக்குப் பட்டினிதான்.

அவருக்கிட்ட ஒரு பழக்கம் இருந்துச்சு. தெனமும் வேலைக்குப் போறபோது ஊருக்கு வெளியில இருக்கற கோயில்ல போயி சாமியக் கும்புட்டுட்டுத்தான் வேலைக்குப் போவாரு. ஒருநாளு பக்கத்தூருக்காரவுங்க ஒழுகற வீட்டை மொகட்டைச் சரி பண்ணித் தரணும்னு சொல்லி அவர வரச் சொன்னாங்க. அவரும் சாமியக் கும்புட்டுட்டு பக்கத்து ஊருக்கு நடந்து போனாரு.

அப்படிப் போறபோது வழியில ஒரு காடு இருந்துச்சு. அதத் தாண்டித்தான் பக்கத்து ஊருக்குப் போக முடியும். அவரு நடந்து போறபோது கால்ல ஏதோ தட்டிவிட்டுக் கீழ விழுந்தாரு. எந்திருச்சுப் பாத்தா கீழ பதிஞ்சிருந்த ஒரு பானை அவரு கண்ணுக்குத் தென்பட்டது. அவரு மண்ணைத் தோண்டுட்டு அந்தப் பானைய வெளியில எடுத்தாரு.

அந்தப் பானை நெறையத் தங்கக் காசா இருந்துச்சு. அடடா நம்ம வேண்டுதலைக் கேட்டு சாமியே நமக்குத் தங்கப் புதையலக் குடுத்துட்டாருன்னு சந்தோஷப்பட்ட அந்த கூரைமேயறவரு, கொஞ்சூண்டு காச அள்ளிப் பானைக்குள்ளாறப் போட்டுட்டு அத ஒரு எடத்துலப் பொதைச்சு வச்சிட்டு அடையாளத்துக்குக் கொஞ்சம் செடிகொடியோட சருகள்ளிப் போட்டு பாக்கி இருந்த காச எல்லாத்தையும் சின்ன மூட்டையாக் கட்டி எடுத்துக்கிட்டு பக்கத்தூருக்குக் கூரை மேயப் போயிட்டாரு.



அந்த வீட்டுல போயி வீட்டுக்குள்ளாற விட்டத்துல அந்தச் சின்ன மூட்டையக் கட்டித் தொங்க விட்டுட்டு வீட்டு மேல ஏறி மொகட்டச் சரி செய்யத் தொடங்குனாரு. அவரு மொகட்டுல இருக்கறபோது அந்த வீட்டுக்கார அம்மா வீட்டுக்குள்ளாற விட்டத்துல கட்டியிருந்த மூட்டையப் பாத்துட்டு, ‘‘ஏய்யா கூரை மேயறவரே இது என்ன மூட்டை தொங்குது…?’’ அப்படீன்னு கேட்டாங்க.

அதுக்கு அந்தக் கூரை மேயறவரு, ‘‘அதுவா அது ஒண்ணுமில்லிங்கம்மா, கொஞ்சம் தொவரம்பருப்பு வாங்கிட்டுப் போறேன். அதத்தான் இப்படி மூட்டையாக் கட்டித் தொங்க விட்டுருக்கேன். போறபோது எடுத்துக்கிட்டுப் போயிடுறேன்னு’’ சொல்லிப்புட்டு அவரு பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சாரு.

அந்த வீட்டுக்கார அம்மாவுக்குச் சந்தேகம். தொவரம்பருப்புன்னா ஏன் அத விட்டத்துல கட்டித் தொங்க விடணும்னு நெனச்சிக்கிட்டு அந்த மூட்டையில என்னதான் இருக்குதுன்னு பாப்போம்னுட்டு உரலத் தள்ளிப் போட்டு அதுல ஏறி அந்த மூட்டைய அவுத்துப் பாத்துச்சு.

அதுல சின்னச் சின்னதா தங்கக் காசு இருந்ததப் பாத்துட்டு, ‘‘அடப் பாவி நீ எங்கிட்டயே பொய்யி சொல்றியா...ன்னு’’ நெனச்சிக்கிட்டு வீட்டுல இருந்த தொவரம்பருப்ப அதே அளவுக்கு அள்ளி அந்த மூட்டையில கொட்டிக் கட்டி வச்சிப்புட்டு தங்கக் காசுகளத் தெரியாம எடுத்துக்கிட்டுப் போயிப் பத்திரப்படுத்திருச்சு.

கூரை மேயறவன் மொகட்ட மேஞ்சிட்டுக் கீழ எறங்கி வந்து கூலிய வாங்கிக்கிட்டு மூட்டையையும் எடுத்துக்கிட்டு தன்னோட ஊருக்குக் கௌம்பிப் போனான். போனவன் அவன் பொதச்சு வச்சிருந்த கொஞ்சூண்டு தங்கக் காசத் தோண்டி வேறொரு துணியில முடிஞ்சிக்கிட்ட்டான்.



வேக வேகமாப் போயி வீட்டுக்குள்ளாற வச்சி மூட்டையப் பிரிச்சிப் பாத்தான். அதுல தங்கக் காசுக்குப் பதிலா தொவரம்பருப்பு இருந்ததப் பாத்துட்டு அவனுக்கு ரெம்ப அதிர்ச்சியாப் போச்சு. இனி அந்த அம்மாக்கிட்டப் போயிக் கேட்டா அது கொடுக்கவா போகுது. நாம அந்த அம்மாக்கிட்ட தொவரம்பருப்புன்னுதான் சொன்னோம். இனி அது தங்கக் காசுன்னு சொன்னா ரெம்ப விவகாரமாப் போயிரும்னு நெனச்சிக்கிட்டு துணியில முடிஞ்சி வச்சிருந்த கொஞ்சூண்டு காசமட்டும் எடுத்து வச்சிக்கிட்டான்.

‘‘எத்தனதான் எண்ணயத் தேச்சிக்கிட்டு மண்ணுல உருண்டாலும் ஒடம்புல ஒட்டுறதுதான் ஒட்டும்னு தெரியாமயா பெரியவங்க சொல்லியிருக்காங்க... நமக்குக் கெடைக்க வேண்டியத ஆண்டவன் கொடுத்துட்டான். அந்த அம்மாவுக்குக் கெடைக்க வேண்டியத நம்ம மூலமா ஆண்டவன் கொடுத்துட்டான்னு’’ நெனச்சிக்கிட்டு அவன் அமைதியானான். யாருக்கு எப்ப எது கிடைக்கணும்னு விதி இருக்கோ அதுதான் கிடைக்கும். நாம கவலைப்பட்டு ஒண்ணும் நடக்கப் போறது இல்ல. எல்லாத்துக்கும் விதிதான் காரணங்கறதுக்காக இந்தக் கதைய இன்றைக்கும் சொல்லிக்கிட்டே இருக்காங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1p.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License