இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

17. பேய் ஓடிப்போச்சு!


பேயக் கண்டு சில பேரு ஓடுவாங்க... ஆனா சில பேரக் கண்டு பேயே ஓடும். பேயப் பத்தின பல கதைகள் எல்லா ஊருலயும் இருக்குது. ஆனா இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கக் கூடிய கதை கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா எல்லாக் காலத்துலயும் ஏமாத்திக்கிட்டே இருக்க முடியாது. இதுக்கு விளக்கமா ஒரு கத இன்னக்கி வரைக்கும் உலவிக்கிட்டு இருக்குது.

ஒரு பெரிய வீடு இருந்துச்சு. அந்த வீட்டுல அப்பா அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பயலுங்க. அப்பா கடுமையான உழைப்பாளி. அவருக்கு நேருக்கு மாறா அவரோட பையனுக இருந்தாங்க. எப்பப் பாத்தாலும் நல்லாச் சாப்புடறது. தூங்குறதுமா இருந்தானுங்க. அவங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக கேக்கல. நல்லாச் சாப்புடறது. அப்படியே எங்கயாவது போயி பொழுதப் போக்கிட்டு வந்து திரும்பவும் தூங்கறது. இப்படியே இருந்துக்கிட்டு இந்தானுக.

ஒருநாளு திடீர்னு அவனுகளோட அப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அவனுகளுக்கு ஒண்ணும் புரியல. என்ன செய்யிறதுன்னும் தெரியல. வீட்டுல இருந்த சொத்துப் பத்தெல்லாம் வித்துத் தின்னானுங்க. எல்லாத்தையும் வித்து அழிச்ச பின்னால அவனுகளுக்குச் சாப்புடறதுக்கு ஒண்ணுமே கெடைக்கல. விக்கிறதுக்கும் ஒண்ணுமில்ல. அவனுக குடியிருக்கற வீட்டத் தவிர வேற எதுவும் இல்ல.

அவனுக ஒரு முடிவுக்கு வந்தானுக. இவ்வளவு பெரிய வீட்டை வித்துட்டு அதுல வர்ற காச வச்சிக்கிட்டுச் சாப்புடலாம்னு நெனச்சானுக. ஏன்னா அவனுகளால வேற வேலை செஞ்சி பொழைக்கவும் முடியாது. அதனால ஒருநா ராத்திரியில அவனுகளாப் பேசிக்கிட்டு இருந்தாங்க.

அந்த வீட்டுல ரெண்டு பேயிங்க இருந்துச்சுங்க. இந்தப் பயலுங்க பேசறதக் கேட்டுட்டு, ‘‘ஆகா இந்த வீட்டுல நாம ரெம்ப நாளாக் குடியிருக்கறோம். இதை வித்துட்டா நாம எங்க போறதுன்னு’’ அதுகளுக்குள்ளாற பேசிக்கிட்டதுக.

அதுக்கு மொதப் பேயி, ‘‘அவனுகளுக்கு நாம பாதுகாத்து வச்சிருக்கற புதையல்ல இருந்து கொஞ்சத்த எடுத்துக் குடுத்து எதாவது தொழிலு செஞ்சி பொழைச்சுக்கச் சொல்லுவோம். அப்ப அவனுக இந்த வீட்ட விக்க மாட்டானுக. நாம இங்க சொகமா இருந்துக்கலாம்னு’’ சொன்னது. ரெண்டாவது பேயி சரின்னது. அதுக ரெண்டும் அவனுககிட்டப் போனதுக.



அந்தப் பேயிகளப் பாத்த இந்தப் பயலுக வெலவெலத்துப் போயிட்டானுக. இருந்தாலும் அத வெளிக்காட்டிக்காம, ‘‘நீங்க யாரு? எதுக்காக இந்த இராத்திரி நேரத்துல எங்கக்கிட்ட வந்தீங்கன்னு’’ மூத்தவன் கொஞ்சம் சத்தமாக் கேட்டான்.

அவனோட சத்தத் கேட்ட பேயிக பயந்து போயி, ‘‘நாங்க ஒங்க வீட்டுல ரெம்ப நாளா இருக்கற பேயிங்க... நீங்க ரெண்டு பேரும் இப்ப பேசிக்கிட்டதக் கேட்டோம். நீங்க இந்த வீட்ட வித்துடாதீங்க... எங்க பாட்டம்பூட்டங் காலத்துல இருந்து இங்ஙனதான் இருக்கோம். நீங்க இந்த வீட்ட வித்துட்டா... நாங்க வேற எங்கயும் போக முடியாது’’ அப்படீன்னு சொன்னதுங்க.

அதக் கேட்ட அந்தப் பயகள்ள கொஞ்சம் வெவரமானவன இருந்த சின்னவன், ‘‘சரி நாங்க வீட்ட விக்கல... ஆனா நாங்க பொழைக்கிறதுக்கு இந்த வீட்ட வித்தாத்தான் எதுவும் கிடைக்கும். அதவச்சி நாங்க பொழைச்சிக்குவோம்னு’’ சொன்னான்.

அதக் கேட்ட மூத்த பேயி, ‘‘நாங்க ஒங்களுக்குக் கொஞ்சம் தங்கக் காசு தர்றோம். அத வெளியில கொண்டுபோயி வித்துட்டு ஏதாவது தொழிலச் செஞ்சி பொழச்சிக்கோங்க... இந்த வீட்ட வித்துறாதீங்கன்னு’’ சொல்லிட்டுக் கொஞ்சம் தங்கக் காச எடுத்துக் கொடுத்துச்சுங்க...

அவனுகளும் அத வாங்கிக்கிட்டு வீட்ட விக்கலன்னு அந்தப் பேயிங்கக்கிட்டச் சொல்லிட்டானுங்க. அந்தப் பேயிங்க கொடுத்தத் தங்கக் காச வித்து ஒரு கடய வச்சானுங்க... இவனுகளுக்குப் போதுமான அனுபவம் இல்லாததனால இவனுககிட்ட பொருள வாங்குனவங்க காசக் கொடுக்காம ஏமாத்திட்டானுங்க. கட நட்டத்துல ஓட ஆரம்பிச்சி கடசியில சுத்தமாப் படுத்திருச்சு.

இவனுங்க சரி இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டு கடய வித்துட்டு அந்தக் காச வச்சி கொஞ்ச நாளு ஓட்டுனானுங்க... அந்தக் காசும் கரைஞ்சி போயிருச்சு. இனிமே என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கயில அவனுகளுக்கு அந்தப் பேயிகளுக்கிட்டயே போயி கேட்டா என்னன்னு தோணுச்சி.

அவனுக அந்தப் பேயிக்கிட்ட போயி, ‘‘எங்க தொழிலு நட்டத்துல போயிருச்சு. நாங்க என்ன செய்யிறது... எங்களுக்கு ஏதாவது இருந்தாக் கொடுங்கன்னு’’ கேட்டானுக.

அந்தப் பேயிகளும் அவனுக மேல இரக்கப்பட்டுத் தங்கக் காசுகள அள்ளி அவனுங்கக் கிட்ட கொடுத்துச்சுக. அவனுங்க அத வாங்கிக்கிட்டுப் போயி எந்தத் தொழிலும் தொடங்காம சொகமா வித்துச் சாப்புட்டானுக.

அந்தக் காசு இருக்கற வரைக்கும் எந்த வேலைக்கும் போகாம எந்தத் தொழிலும் செய்யாம இருந்துக்கிட்டே திங்கவும் தூங்கவுமா இருந்து காசக் கரைச்சாங்க. பேயிக கொடுத்த காசு எல்லாம் தீந்து போனவுடனே மறுபடியும் அந்தப் பேயிங்கக் கிட்டப் போயி கேட்டானுங்க.

அந்தப் பேயிகளும் சரி போனாப் போகுதுன்னு நெனச்சிக்கிட்டு அவனுகளுக்குத் தங்கக்கிட்ட இருந்த தங்கக் காசுகள்ள கொஞ்சத்த எடுத்துக் கொடுத்துச்சுக. அவனுகளும் அத வாங்கிட்டுப் போயி ரெம்ப சொகுசா இருந்தானுங்க... கொஞ்ச நாளுள அத்தன தங்கக் காசுகளும் தீந்து போச்சு. அவனுக அந்தப் பேயிக்கிட்டப் போயி மறுபடி கேக்க அதுகளும் கொடுத்துக்கிட்டே இருந்துச்சுக.

இவனுக ஒழைக்காமலேயே அந்தப் பேயிகள ஏமாத்தி ஏமாத்தி காசுகள வாங்கித் தின்னுக்கிட்டு இருந்தானுக. ஒரு கட்டத்துல அந்தப் பேயிகளுக்கு அவனுகளப் பத்தித் தெரிஞ்சி போச்சு. இனிமே அவனுகளுக்கு எந்த ஒதவியும் செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணிருச்சுக.

அந்தப் பேயிக கொடுத்த காசு செலவழிஞ்ச ஒடனே அந்தப் பயலுக அந்தப் பேயிகக்கிட்ட வந்து ஏதாவது ஒதவி செய்யிங்கன்னு கேட்டானுக அதுக இல்லன்னு சொல்லிட்டதுக. அதக் கேட்ட அந்தப் பயலுக, ‘‘அப்ப நாங்க இந்த வீட்ட விக்கப் போறம்... நீங்க வேற எடம் பாத்துக்கிட வேண்டியதுதான்னு’’ சொன்னானுங்க.



அதுக்கு அந்தப் பேயிகளும், ‘‘பரவாயில்ல... நாங்க வேற எடம் பாத்துக்கிடுறோம். நீங்க இந்த வீட்ட வித்துடுங்கன்னு’’ சொல்லிட்டுப் போயிருச்சுங்க.

அவனுகளுக்கு ஒண்ணும் ஓடல. பட்டினியா அந்த வீட்டுலயே கெடந்தானுங்க என்ன செய்யிறதுன்னு யோசிச்சி இந்த வீட்ட வித்துடலாம்னு முடிவு பண்ணினானுங்க. அப்பப் பாத்துப் பெருமழை அடிச்சிப் பேஞ்சிச்சு. இடி மின்னல்னு ஒண்ணும் செய்ய முடியல. அப்ப பெரிய இடி இடிச்சு அவனுக இருந்த வீட்டுல விழுந்துச்சு.

அந்த இடி விழுந்ததுல அந்த வீடு இடிஞ்சு போச்சு. அவனுக ரெண்டுபேரும் எப்படியோ தப்பிச்சு வெளியில வந்துட்டானுங்க... மழையில நனஞ்சிக்கிட்டே இருந்தானுங்க. அப்பத்தான் அவனுக ஒழைக்காம நாம அந்தப் பேயிகள ஏமாத்திக்கிட்டே இருந்துட்டோம்... அதுகள ஏமாத்துனதுக்கும் ஒழைக்காம இருந்ததுக்கும் நமக்கு இந்தத் தண்டனை கெடச்சிருக்குன்னு நெனச்சிக்கிட்டு மனசு நொந்து போனானுங்க...

ஒழைக்காத சோம்பேறிகளுக்கு பேயி என்ன... கடவுள்கூட ஒதவ மாட்டாரு... சோம்பேறியா இருக்கறவனுக கடைசியில இப்படித் தெருவுலதான் நிக்கணும்னு இன்னக்கி வரைக்கும் இந்தப் பகுதியில இந்தக் கதையச் சொல்லிக்கிட்டே இருக்கறாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1q.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License