இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

பண்டைய இசைக்கருவிகள்

6

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வழியாக, 1987 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கும் சி. கோவிந்தராசன் அவர்களது ‘கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி’ யில் இடம் பெற்றிருக்கும் பண்டைய இசைக் கருவிகள் மற்றும் அதன் பயன்பாட்டுத் தகவல்கள்.

கங்கில் - (கலை)

இசைக்கருவிகளுள் நீண்ட குழலாக உலோகத்தால் அமைக்கப் பெறும் “காளம்” என்ற குழற் கருவியின் ஓருறுப்பு “சிவபாத சேகரனென்றும். ஸ்ரீராஜனென்றும் திருநாமம் வாங்கி கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள்” (தெ.கல்.தொ.2.கல்.91.) (க.க.சொ.அகரமுதலி, ப.94.)

கரடிகை - (கலை)

கரடி கத்தினாற் போன்றதாக ஒலி தரும் இசைக்கருவி. தோற்கருவியாகிய இது.

“கரடி கத்தினாற் போலும் ஓசையுடைத்தாதலாற் கரடிகை என்று பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார்.”

“அடுத்தன தட்டழி மத்தளி கரடிகை தாளம் காககளம் ஏற்றி” (பார்த்திப சேகரபுரச் செப்பேடு)

காகளம் - (கலை)

வட்டமாக அகன்ற வாயுடன் குவிந்து நீண்டு குழலாக இருக்கும் குழலிசைக்கருவி எக்காளம் என்று பெயர் பெறும்.

“அக நாழிகைச் சென்னடைக்கு அடுத்தன தட்டழி, மத்தளி, கரடிகை, தாளம், காகளம் ஏற்றி” (பார்த்திப சேகரபுரச் செப்பேடுகள், கி.பி.9.நுாற்.) (க.க.சொ.அகரமுதலி, ப.196.)

காளம் - (கலை)

குழற்கருவி, எக்காளம், குழல் வடிவில் நீண்டு முன்வாய் அகன்றிருக்கும் தோற்றத்தில் அமைக்கப் பெறுவது. இதன் பகுதிகள் கங்கில், குழல், மோதிரம் என்பனவாகும். கங்கிலையும், குழலையும் இணைக்கும் திருகுச்சுரையே மோதிரம் என்று பெயர் பெறும். இத்தகைய காளம் தஞ்சை இராசராசேச்சுரத்தில் சிவபாதசேகரன் காளம், ஸ்ரீராஜராஜன் காளம் என்ற பெயர்களால் இராசராசனால் பொன்னால் செய்யப்பெற்று கொடுக்கப்பட்டிருந்தன. இராசராசன் இரட்டைக் குழலமைப்பில் செய்தளித்துள்ளமை சிறப்புடையதாகும்.

“சிவபாத சேகரமென்றும், ஸ்ரீராஜராஜனென்றும் திருநாமம் வாங்கி, கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள்” (தெ.கல்.தொ.2.கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.132.)


கொட்டி மத்தளம் - (கலை)

தஞ்சைப் பெரிய கோயிலில், முதல் இராசராசன் திருப்பதியம் பாடுதற்கு அமைத்த நாற்பத்தெண்மர் தேவாரம் பாடும் போதும், காந்தர்விகள், காந்தர்வர்கள் எனப்பட்ட தமிழிசைப் பாடகர்கள் பாடும் போதும், பின்னணி வாத்தியங்களுள் ஒன்றாக வாசிக்கப்பட்ட மத்தளம். இம்மத்தளத்துடன் சுத்த மத்தளமும் வாசிப்பதில் தனித்தன்மை பெற்ற வழியினர் “பார சைவர்” எனப்படுவோராவர்.

1. “திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் போது கொட்டி மத்தளம் வாசிக்கும் குணப்புகழ் மருதனான சிகாசிவன்.

2. தமிழ் பாடும் போது “கொட்டி மத்தளம் ஒன்றுக்கு காந்தர்வ தாசனுக்குப் பங்கு ஒன்று.” (தெ.கல்.தொ.2.கல்.65,66.) (க.க.சொ.அகரமுதலி, ப.156.)

சகடை கொட்டிகள் - (சம)

தம்பட்டம் அடிப்பவர்கள். கோயில் விழாக்களில் தம்பட்டம் (பறை) அடிப்பவர்கள் உவச்சர்க்கு உட்பட்டவராவர். இவர்கள் உவச்சு என்ற பெயரால் காணியாட்சி பெறுவர்.

“உவச்சுக்கு உட்படும் மேற்படி சகடை கொட்டிகளில் சாத்தன் அம்பலத்துக்கு தன்னேற்றம் ஆள் பதினோறாவர்க்குப் பேரால் பங்கு அரை.” (தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.168.)

சல்லரி - (சம)

கிராம தேவதைகளின் விழாக்களில் ஒலிக்கச் செய்யும் உலோகத்தாலான பெருஞ்சிலம்பி. (க.க.சொ.அகரமுதலி, ப.478.)

செகண்டி - (சமு) செயகண்டி

உலோகத்தாலான தட்டும் இசைக்கருவி. கோயில்களில் பூசைக் காலத்து, காணியுடைய உவச்சர் இக்கருவியினைத் தட்டுவது வழக்கு.

“செகண்டிகை - இவ்வூரில் அரயணிச் சிங்க உவைச்சன் கொட்டுவதாக வைத்தோம்.” (தெ.கல்.தொ.12, பகு.1,கல்.114.) (க.க.சொ.அகரமுதலி, ப.202.)

தட்டழி - (சம)

ஒரு முகத்தோற்பளை. தம்பட்டம். வரி வகையுள் இதுவுமொன்று. சோழராட்சியில் கிராமசபை கூடுவதற்குரிய நாளினைத் தட்டழி கொட்டி ஊரவர்க்கு அறிவிப்பர்.

“காமரசவல்லி சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மக்களோம். இவ்வாட்டை தனுநாயற்ற வியாழக்கிழமை பெற்ற கார்த்திகை நான்று தட்டழி கொட்டி பெருங்குறி சாற்றி மண்டபத்தே கூட்டி.” (தெ.கல்.தொ.19,கல்.231, உத்தம சோழன் யாண்டு.9.) (க.க.சொ.அகரமுதலி, ப.217.)

தட்டழி கொட்டிகள் - (சம)

தட்டழி என்ற பெயரமைந்த தப்பட்டை எனும் தோற்கருவியினை இசைப்பவர்கள். இவர்கள் உவச்சு என்னும் கோயில் பணிக்கு உட்பட்டவராவர்.

“திருவோணம் பெரு விழாவாக ஏழு நாளும் நிசதி நுாறு விளக்கும் பதினாறாள் தட்டழி கொட்டிகளையும் கொண்டு செய்வித்து ஸ்நபன மாட்டு வித்து” (கம்பவர்மன் கல்வெட்டு, தெ.கல்.தொ.7,கல்.421.) (க.க.சொ.அகரமுதலி, ப.217.)


தாரணி படகம் - (கலை)

உவச்சர் மாலையணிந்து கொட்டும் தம்பட்டம். பலர் வரிசையாக நின்று அடிக்கும் தம்பட்டம். திருவாவடுதுறைக் கோயிலில் திருவிழாக் காலங்களில் இந்நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

“உவச்சர்கட்கு, தாரணிபடகத்துக்குக் கால் - நிலம்” (தெ.கல்.தொ.19,கல்.69.) (க.க.சொ.அகரமுதலி, ப.237.)

தாளம் - (கலை)

வெண்கல உலோகத்தால் வட்ட வடிவில் இணையாகச் செய்யப்பெற்று, ஒன்றை ஒன்று தட்டுவதால் இசை தரும் கருவி. கஞ்சக் கருவிகளுள் ஒன்று.

திமிலை - (கலை)

பம்மை என்னும் தோற்கருவி. (இசைக்கருவி) திருக்கோயில்களில் திருப்பலிக்கு உவச்சு கொட்டுகிற போது இசைக்கப்படும் கருவிகளுள் ஒன்றாம்.

“இவ்வாண்டு முதல் காளம் இரண்டுக்கும் சங்கு ஒன்றுக்கும், திமிலை ஒன்றுக்குமாக ஆள் நாலுக்கு நிலம் இரு வேலி” (புதுக்.கல்.85)

திருப்பலி கொட்டுதல் - (சம)

கோயிலில் பூசை நிகழும் பொழுது உவச்சர் செகண்டி, காளம் முதலிய இசைக்கருவிகளை இசைத்தல் - நாள் கூலியோ காணியாட்சியோ இப்பணிக்குச் செய்யப் பெறுவது “உவச்சு” என்னும் பெயரால் வழங்கப் பெறும். திருப்பலி என்பது ஸ்ரீபலி என்று வடமொழியில் கூறப்பட்டுள்ளது.

“இத்தேவர்க்கு திருப்பணி மூன்று தேச காலமும் செகண்டிகை உட்பட ஐஞ்சான் கொண்டு திருப்பலி கொட்டுவதற்கு வைத்த நிலம். இவ்வூரில் உவச்சர்க்குரியது.” (தெ.கல்.தொ.12.கல்.114.) (க.க.சொ.அகரமுதலி, பக் 251.)

திருப்பள்ளியெழுச்சி கொட்டுதல் - (சம)

வைகறைப் பொழுதில், திருக்கோயில்களில் இறைவனைத் துயில் எழுப்புவதாக இசைக்கருவிகளைக் கொட்டுதல்.

“திருப்பழங்கோளூர் மகாதேவர்க்கு - ஆயிரங்குழி கொண்டு ஆறாள் மூன்று ஸங்கயும் திருப்பள்ளி எழுச்சி கொட்டுவதாகவும்.” (தெ.கல்.தொ.19. கல்.169.) (க.க.சொ.அகரமுதலி, ப.251.)

சங்கியை சங்கய் என்று திரிந்துளது. சங்கியை - எண்ணிக்கை.

திருப்பறையறைவு - (சம)

திருக்கோயில்களில் நிகழும் திருவிழா நிகழ்ச்சிகளை நாளும் பறையறைவித்து ஊரவர்க்கு அறியச் செய்யும் செயல்.

“ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் ஆட்டைப் பெரிய திருவிழாவுக்குத் திருக்கொடியேற்று நான்று திருப்பறையறைவு கேட்பிக்கும் கடிகையார்” (தெ.கல்.தொ.2 2.கல்.26.) (க.க.சொ.அகரமுதலி, ப.252.)

பஞ்சமா சத்தம் - (கலை)

ஐந்து வகையான உயர்ந்த ஓசைக்கருவிகள். இவை விருதுப் பறைகளாகும். திருக்கோயில்களில் நிகழும் வழிபாட்டின் போதும் இவ்விசைக்கருவிகளை இசைப்பது வழக்காகும். செண்டை, திமிலை, செகண்டி, கைத்தாளம், காளம் என்றும், தத்தளி, மத்தளி, கரடிகை, தாளம், காஹளம் என்றும் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.319.)


பாடவியம் - (கலை)

கானம் பாடுவார்க்குப் பின்னிச்சையாக இசைக்கப்படும் வாத்தியங்களுள் ஒன்று.

“பாடவியம், ஒன்றுக்கு அரையன் வாத்யமாராயனுக்குப் பங்கு ஒன்று.” (தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.352.)

மத்தளி - (கலை)

மத்தளத்தின் உறுப்புக்களமைந்த இரு முகத்தோற்கருவி.

“அடுத்தன தட்டழி மத்தளி கரடிகை தாளம் காகளம் ஏற்றி எட்டுப் பணி - அறமரு சாதிகாக்கும் பரிசினாற் காப்பது.” (பார்த்திப சேகரபுரச் செப்பேடுகள்.) (க.க.சொ.அகரமுதலி, ப.402.)

முண்டதாரி - (கலை)

சுருதிக் கருவியை, பாடல் ஆசிரியனுக்கு அருகிருந்து இசைப்பவன்.

“கானபாடி மூவர்க்கு முண்டதாரி அணுக்கனுக்கு ப்பங்கு ஒன்று.” (த.பெ. கோ.கல்.தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.419.)

மொரலியம் - (கலை) (மோர்வியம்)

துளையிட்டு இசைக்கும் இசைக் கருவிகளுள் ஒன்று. முகவீணை என்றும் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.432.)

- முனைவர் தி. கல்பனாதேவி, அச்சிறுபாக்கம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/tidbits/p248.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<