இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


1. சுற்றுலாத் திட்டம்

எனக்கும் ஆர்னிகா நாசருக்கும் திருமணமாகி நாற்பது வருடங்கள் ஆகின்றன. திருமணத்திற்கு முன்பே அவர் என் உறவுக்காரர்த்தான். திருமணத்திற்கு முந்தைய உறவு முறையில் நான் அவருக்கு சின்னம்மா. திருமணத்திற்கு பிறகு எங்கள் உறவு முறைகள் மாறின. சின்னம்மா, மனைவி என்கிற இரு வெவ்வேறு ஆளுமைகளுடன் தான் அவருடன் குடும்பம் நடத்தி வருகிறேன்.

திருமணமான புதிதில் வெடவெடப்பான உடலுடன் மீசை முளைக்காத விடலைப்பையனாய் அவர் காட்சியளிப்பார். நடிகர் ரஜினிகாந்த் போல அவருக்கு கோரை முடி தலைகேசம். முன்கோபி. உணர்ச்சிப்பூர்வமானவர். விழித்துக் கொண்டே கனவு காண்பவர். தலைமைப் பண்புமிக்கவர். எதனையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்.

என் சொந்த ஊர் திருக்குற்றாலம் அருகில் உள்ள தென்காசி. என் உறவுக்காரர்கள் எல்லாம் பருவக்காலத்துக்கு வந்தால் ஒரே நாளில் நீர்வீழ்ச்சியில் நான்கைந்து தடவை குளிப்பர். நான்கைந்து தடவை அசைவம் சாப்பிடுவர். என் கணவர் அவர்களுக்கு எதிர்மறையானவர். வீட்டிலேயே ஒத்தைக் குரங்காகத் தங்கிக் கொள்வார்.

திருமணமான முதல் முப்பது வருடங்கள், நாங்கள் எங்கும் சுற்றுப் பயணம் போனது கிடையாது. கடந்த 10 வருடங்களாகதான் இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறோம்.

ஆர்னிகாவை சுற்றுலா மோகினி பிடித்துக் கொண்டாள் போலும். எந்த ஊருக்குச் சுற்றுலா சென்றாலும் அபாரமாகத் திட்டமிடுவார் ஆர்னிகா. நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு. லோக்கலில் சுற்றிப் பார்க்க ஆட்டோ அமர்த்துவார். அரை வயிறுதான் சாப்பாடு அசைவம் அறவே கிடையாது.


சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார். நுழைவுக் கட்டணம், அனுமதி நேரம், விடுமுறை நாள், தங்குமிடத்திலிருந்து தூரம் எல்லாம் குறித்து வைத்திருப்பார்.

அறுபதாயிரம் செலவு பண்ணி சுற்றுலா செல்லும் இடங்களுக்கு வெறும் இருபதாயிரம்தான் செலவு பண்ணுவார்.

இந்தி கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டுக் கேட்டு ஒன்றிலிருந்து நூறு வரை எண்களை இந்தியில் சரியாகச் சொல்வார். சின்ன சின்ன வாக்கியங்கள் பேசுவார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆர்னிகா பணி புரிந்த போது சுந்தரம் என்கிற கேரளாக்காரர் குடும்ப நண்பரானார்.

அவரது மகள் சுமி துபாயில் ஒரு கார்கோ கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர் எப்ப பார்த்தாலும் “மாமா மாமி! துபாய் ஒரு வாரம் தங்கிட்டு போங்க. உங்களுக்கு துபாய் சுத்திக் காட்றேன்!” என்பார்.

என் கணவருடன் தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்த சம்பத் என்கிற நண்பர் எகிப்து போகும் ஆசையை வளர்த்தார்.

என் கணவர் ஒரு சுற்றுலா ஆர்வலர் இல்லையா? அவர் பள்ளி நாட்களில் எகிப்து பிரமிடுகளைப் பற்றி அதிகம் படித்துப் படித்து பிரமிடுகள் மீதான காதலை வளர்த்துக் கொண்டார்.

என் கணவரின் இயற்பெயர் நாசர். முகமது நாசரோ நாசர் முகமதோ இல்லை. என் மாமனார் என் கணவருக்கு எகிப்து அதிபர் நாசரின் நினைவைப் போற்றி அவரின் பெயரை வைத்திருந்திருக்கிறார்.

பின்னாளில் வெறும் நாசர் என்கிற பெயர் பிடிக்காமல் ஆர்னிகா நாசர் ஆனார் என் கணவர். இருந்தாலும் எகிப்தின் மீதான இரகசியக் காதலை வளர்த்துக் கொண்டேதான் இப்போதும் இருக்கிறார்.


அடுத்து உம்ரா -

மனசாட்சிதான் உலகின் உண்மையான கடவுள் என கூறி தன்னை மதம் சாராத ஆத்திகனாக அறிவித்துக் கொண்டவர் ஆர்னிகா.

ஆனாலும், தொடர்ந்து திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் படித்துப் படித்து இஸ்லாமிய நீதிக் கதைகள் எழுதி எழுதி நபிகள் நாயகத்தின் பெரும் அபிமானி ஆனார் என் கணவர்.

‘நபிகள் நாயகம். இருபது எம்பிஏ பட்டதாரிகளுக்கு சமம். இஸ்லாமில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. உலகின் லட்சம் தகவல்களை ஹராம் ஹலால் என வகை பிரித்த ஒரே மதம் இஸ்லாம். இஸ்லாமின் ஒழுங்கு ரசிக்கதக்கது. நாத்திகர்களும் இஸ்லாமை பின்பற்றி நல்ல மனிதனாக வாழ்ந்து சந்தோஷமாக மரிக்கலாம். பள்ளிவாசல்களில் பாசாங்கு இல்லாத வழிபாடு மனதிற்கு இதம் பதம் சுகம்’ என்பார்.

அதன் தொடர்ச்சியாக காபாவை தரிசிக்கும் ஆவலை உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டார்.

சுற்றுலா அழைத்துச் செல்லும் முகவர்களைத் தொடர்பு கொண்டார்.

சென்னை - துபாய் நான்கு நாட்கள் சுற்றுலா இருவருக்கு 2,20,000 ரூபாய் கேட்டார்கள்.

உம்ரா புனிதப் பயணம் ஆறு நாட்களுக்கு இருவருக்கு 2,20,000 ரூபாய் கேட்டார்கள்.

எகிப்து ஆறு நாட்கள் சுற்றுலா. இருவருக்கு நான்கு லட்சம் கேட்டார்கள்.

எங்கள் தனிச்செலவு இரண்டு லட்சம் என வைத்துக் கொண்டால் மொத்தம் பத்தரை லட்சம் ரூபாய் தேவை.

எகிப்து சுற்றுலா வழிகாட்டிகளை அணுகினோம். எகிப்தைச் சுற்றிக் காட்ட எங்கள் சென்னை வீட்டை விற்றுத் தரக் கேட்டார்கள்.


துபாய், மெக்கா, எகிப்தில் உள்ள நண்பர்களை அணுகி ஆலோசனை கேட்டார் ஆர்னிகா. அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் நழுவினார்கள்.

துபாய் சுமி வேலையை விட்டுவிட்டு கேரளா திரும்பி விட்டார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலை பார்த்து, தமிழகம் திரும்பிய உப்பிலி ‘தகவல் தொடர்புகள் காலாவதி ஆகி விட்டன’ என்றார்.

எகிப்து ஹம்சா தாமரை இலைத் தண்ணீர் போல, தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் நடந்து கொண்டார்.

ஒரு முகநூல் நண்பர் மூலம் எழுத்தாளர் ஜஸிலா பானு அறிமுகமானார். அவரும் எங்களுக்கு சிக்கனமாகப் பல சுற்றுலா நிரல்களை வடிவமைத்துக் கொடுத்தார்.

எங்களுடைய சிக்கனமான நிதிநிலைக்கு யாருமே ஒத்து வரவில்லை.

எங்கள் துபாய் - உம்ரா - எகிப்து பயண திட்டம் கசிந்தது. எங்கள் மருமகளும் மகனும் எங்களிடம் திட்டவரை அப்பட்டமானது.

நானும் என் கணவரும் மகன் வீட்டில்தான் இருக்கிறோம். தினமும் பேரன் முஹம்மது அர்ஹானை பள்ளிக்கு ஒன்பது டு மதியம் ஒன்று அனுப்ப வேண்டும். மதியம் சிறு தூக்கம். மாலை இருந்து இரவு வரை நான் பேரனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்க வேண்டும்.

மகன் கல்கத்தாவில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறான். கோவை ஆர்எஸ்புரம் மருத்துவமனையைக் கவனிக்கும் பொறுப்பு மருமகளிடம் போய்ச் சேர்ந்தது.

மகன் - மருமகள் - பேரன்- கணவர் என்கிற கப்பலின் நங்கூரம் நான்.

திடீரென்று நிலாமகன் என்னை அலைபேசியில் அழைத்தான்.

“நல்லா இருக்கீங்களாம்மா?”

“நல்லாயிருக்கேன். நீ நல்லாருக்கியா?”

“இம்… அப்பா சும்மாவே இருக்க மாட்டாரா?”

“அவர் என்னடா செஞ்சாரு?”

“துபாய் -உம்ரா- எகிப்து சுற்றுப்பயணம் போகப் போறீங்களாமே...?”

“பேசிக்கிட்டு இருக்கோம்!”

“சுற்றுலாவுக்குக் குறைந்தது பத்து லட்சம் வரை செலவாகுமாமே… அப்பா வச்சிருக்காரா?”

“கவலைப்படாத. உன்கிட்டயும் ஜாஸ்மின்கிட்டயும் பணம் கேட்டுத் துன்புறுத்த மாட்டோம்!”

“அப்படியா? எத்தனை நாள் சுற்றூலா?”

“பதினைஞ்சு நாள்!”


“கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? அப்பாவுக்கு வயசு 65, உங்களுக்கு வயசு 62, இரண்டு பேரும் மூணு நாடுகளுக்கு பயணம் போறது உங்க உடம்புகளுக்கு ஒத்து வருமா? உம்ரா மட்டும் போய்ட்டு வர வேண்டியதுதானே?”

“சென்னை - துபாய், துபாய் - ஜித்தா, ஜித்தா- கெய்ரோ, கெய்ரோ - சென்னை நேரம் மிச்சம் பணம் மிச்சம் தனித்தனியாக மூணு நாடுகளுக்கு, நாங்க எந்தந்த வயசில போய்ட்டு வரது? எங்க வண்டி ரிசர்வ்ல ஓடுதுடா. எப்ப பெட்ரோல் தீந்து நிக்குமோ அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்!”

“எந்தத் தேதில போறீங்க?”

“பேசிக்கிட்ருக்கம் இன்னும் முடிவாகலை…”

“அம்மா! உங்க பயணத்தை அடுத்த வருஷத்துக்கு தள்ளிப் போடுங்க. மீண்டும் ஒரு பேரனோ பேத்தியோ உங்க மருமகள் பெத்து தரப் போறா… புது விருந்தாளியை வரவேற்கத் தயாராகுங்க!” என்றான் ஆணியடித்தாற் போல...!

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/tourist/serial/serial1/p1.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License