இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

வீணை மத்தளமாகிறது


கண்ணிற்குள் வளர்ந்தமகள் இமைப்பட் டாலே
      கலங்கிடுவாள் எனப்பூவாய் வளர்ந்த பெண்ணாள்
மண்ணிற்குள் விழுந்தவிதை மெல்ல மெல்ல
      மண்பிளந்து வளர்வதினைப் பேணல் போல
பண்ணிற்குச் சேர்க்கின்ற சுருதி போல
      பக்குவமாய் நாள்பார்த்து வளர்ந்த பூவாள்
தண்ணீர்க்குள் வலையவரும் மீனாய் வீட்டில்
      தவழ்ந்துவரும் தென்றலென வளர்ந்த கண்ணாள் !

நெஞ்சோடு அணைத்தபடி இறக்கைக் குள்ளே
      நெகிழ்வோடு கோழிகாக்கும் குஞ்சு போல
கிஞ்சித்தும் தூசிவந்து படியா வாறு
      குளர்பதன அறைக்குள்ளே பேணு கின்ற
விஞ்ஞான அற்புதமாம் கணினி போல
      வீட்டிற்குள் வாய்த்தநல்ல விளக்காய் வண்ண
மஞ்ஞையெனும் அழகுப்பெட் டகமாய் அன்பு
      மலர்களிடை மணமாக வளர்ந்த பெண்ணாள் !

வருங்காலக் கனவுகளோ கோடி யாக
      வளர்த்துவைத்த நெஞ்சினளாய் வாழ்வை யெண்ணிப்
பருவத்தில் நிற்குமவள் கருத்திற் கேற்ப
      பல்வேறு இடங்களிலே பார்த்துப் பார்த்துப்
பொருந்துகின்ற குணம்பார்த்து குடும்பம் பார்த்துப்
      பொருளோடு தகுதிதனை ஆய்ந்த பார்த்துத்
திருமணத்தை இருமனங்கள் கலப்ப தற்குத்
      திருவாக நடத்திவைத்து மகிழ்ந்தார் பெற்றோர் !

புதுமணத்தின் நுகர்ச்சியிலே பொழுதும் நன்றாய்
      புத்தின்பத் தேடலிலே கழிந்து செல்ல
மதுமயக்கம் தெளிதல்போல் மோக வாசை
      மங்கிவர மணவாளன் குணமும் மாறப்
புதுமனைவி எனத்தலையில் தூக்கி வைத்துப்
      புகழ்மொழிகள் பொழிந்தநாவில் தேள்கொ டுக்காய்
எதுசெயினும் குற்றமெனக் கொட்ட லானான்
      எல்லாமும் தாய்க்கயிற்றால் ஆட லானான் !

அன்பினிலே வளர்ந்தமகள் துன்பப் பட்டால்
      அதைப்பார்க்க முடியாமல் கேட்ட தெல்லாம்
முன்வந்து தந்திடுவார் என்ற நோக்கில்
      முள்ளாகச் சொற்களிலே குத்தும் அத்தை
தன்பங்காய் மாமனாரும் சாட்டை வீச்சாய்
      தளிர்நெஞ்சைப் புண்ணாக்கி வீசுவார் சொல்லை
புன்னகையை இரவினிலே சிந்திக் காலை
      புன்செயலைப் புரிகின்ற கொடுமைக் கணவன் !

கதிர்விழிக்கும் முன்விழித்து வாசல் கூட்டிக்
      கலைமிளிரும் கோலமிட்டே அழகு செய்து
முதியவர்க்கோ இனிப்பில்லாப் பாலைத் தந்து
      முரண்நெஞ்சக் கணவனுக்கோ இனிப்பைச் சேர்த்தும்
மதிக்காத நாத்திக்கும் மணக்கத் தந்து
      மலையளவு பாத்திரங்கள் துலக்கி வைத்தும்
சதிமனத்தார் என்னசொல்வார் என்ற அச்சம்
      சதிராடும் முகத்தோடு வலைய வந்தாள் !

உப்பில்லா உணவுவகை ஒருவ ருக்கு
      உரப்பில்லா புளிகுறைவு ஒருவ ருக்கு
உப்போடு சுவையுணவு மற்றோர்க் கென்றே
      உணவுதனைப் பலவகையாய் செய்த ளித்தும்
தப்புதனைக் கண்டுரைக்கும் குடும்பத் தார்கள்
      தான்விரும்பும் ஒருசுவையை ஆக்கி யுண்ண
ஒப்புதலும் இல்லாமல் அடிமை யாக
      ஒப்புக்கே மருமகளாய் பணியா ளானாள் !

ஏடுகற்ற கல்விக்கும் பயனு மின்றி
      எந்தவொரு நூல்படிக்க நேர மின்றி
வீடுகூட்ட துணிதுவைக்க வீட்டுக் காரர்
      வினையாற்றச் செல்வதற்குப் பணிக ளாற்றி
மாடுபோல மாமிமாமன் நோய்க ளுக்கு
      மருந்தளித்துத் தாதியெனத் தொண்டு செய்து
வாடுகின்ற கிளியைப்போல் இல்லக் கூண்டில்
      வாயிருந்தும் ஊமையெனக் குமுற லானாள் !

அலங்காரம் செய்துபுறம் கணவ னோடு
      ஆசையோடு உரையாடிச் செல்வ தற்கும்
கலகலென பழகிவந்த தோழி மாரைக்
      கண்ணாலே கண்டுநலம் கேட்ப தற்கும்
வலம்வந்த பிறந்தவீட்டுச் சுற்றத் தாரின்
      வாழ்த்துகளை நன்னாளில் பெறுவ தற்கும்
குலமகளாம் பெயர்சூட்டி இயலா வாறு
      கூட்டிற்குள் சிறகுவெட்டி முடக்கி வைத்தார் !

கோதையவள் கற்பனையும் கனவு மெல்லாம்
      கோட்டைமணல் போலவன்றோ ஆன தின்று
போதையாகும் தட்சணையின் கொடுமை யாலே
      பொன்வீணை மத்தளமாய் ஆன தன்றோ
காதைகளும் கவிதைகளும் உரிமை பேசிக்
      கட்டுகள்தாம் உடைந்ததென்று முழங்கி னாலும்
பேதையராய்த் துணிவின்றி உள்ள மட்டும்
      பெண்ணுரிமை என்பதெல்லாம் வெற்றுப் பேச்சே !

- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/verse/p1616.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License