வாழ்க தமிழ்!
அன்னைத் தமிழின்பால் உள்ள
அன்பால் இணைந்தோமே
அருந்தமிழ் சிந்தனைகள் பல
அன்புடனே பகிர்ந்தோமே-தமிழ்
ஆன்றோர்கள் சொன்னவழி நடப்போமே
இனியதமிழையே நாவினில் உரைப்போமே
ஈடில்லாமொழியது எம்மொழி-என்றும்
உளம்தனிலே கொண்டதை வளர்ப்போமே
ஊக்கங்கள் அளித்திடுமே எம்மொழி
என்றென்றும் எமக்கது செம்மொழி-என்றும்
ஏற்றமே பெறவேண்டும் நம்மொழி
ஐந்தாயிரம் ஆண்டுகளாயிது கன்னிமொழி
ஒரு சொல்லே உரைத்தாலும் அதில்
ஓராயிரம் பொருளுணர்த்தும் அழகுமொழி
ஔவையவள் வளர்த்திட்ட அற்புதமொழி
எஃகினைப்போல் உறுதியாக இதை
உளம்தனிலே கொண்டிடுவோமே...!
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.