அந்தநாள் ஞாபகம்!
ஆலமரம் பெரிதாகப் பரந்து விரிந்து
அழகிய விழதுகளோடு பார்க்கையில்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் ஊற்றாக
அன்னை நம்மைத் தாங்கியதுபோல
அதன் கிளைகளில் என்னை தாங்கியே
அமரவைத்தே காற்றினில் அசைந்து அசைந்தே தாலாட்டும்
அனைத்து பறவைகளின் கானங்களும்
அழகிய இசையைக் காதினில் ஒலிக்கும்
அந்நாள் பால்ய நண்பர்களுடன்
ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா
ஆரம்பப்பள்ளியில் சிலமணி நேரம்
ஆலமரத்து விழுதில் பலமணி நேரம்
அம்மா நம் சுட்டித்தனத்தை ரசிப்பதைப்போல
அமைதியாய் ஆலமும் அசைந்தே ரசித்திடுமே
சாலையில் ஓடி விழுந்ததுண்டு
ஆலமரத்தினில் ஆடி விழுந்ததில்லை
இன்னும் நினைவுகள் ஏராளம்
இன்றும் ஆலத்தின் மனதும் நிழலும் தாராளம்...!
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.