அற்புதம்
மனதில்
உதிர்ந்த பூக்களை
கையில் அள்ளி
கோர்த்தேனது
அழகிய கவி மாலையாய்
ஆனது அற்புதம்...!
கவிதைக் கடலில்
மூழ்கி வார்த்தை
முத்துகள் எடுத்தேனது
கவி வார்ப்பென
அழகிய அணிகலனாய்
மாறியது அற்புதம்...!
பூக்களில் தேனை எடுப்பது போல்
பாக்களில் சொற்தேனை
பதித்தேனது
அழகியக் கவிக்கூடாக
உருவானது அற்புதம்...!
மலர்களின்
வாசம் போன்ற
சொற்களைப் பதித்தேனது
என்றென்றும்
மணம் பரப்பும்
தமிழ் மொழியெனும்
கவிக் கடலாக
மாறியது அற்புதம்...!
தமிழ் மலரெனும்
வார்த்தையில் ஜாலங்கள்
செய்திட்டேனது
மங்காது மணம்பரப்பும்
அற்புத தமிழ்க்கவியாக
ஆனது அற்புதம்...!
கவிதை
துளிராய்
தளிராய்
உருவாகி
கவிமரமாய்
வளர்ந்தது
அற்புதமே...!
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.