சாகா வரமோ...?
எங்கும் பணமே உனைத்தேடி
அங்கும் இங்கும் அலைகின்றார்
பொங்கும் வறுமை நிறையிடத்தில்
தங்குவதில்லை நீயேனோ !
உலகம் முழுதும் உன்னாலே
கலகம் செய்து திரிகின்றார்
பலவும் கேடுகள் உன்னாலே
சிலவும் நன்மை உன்னாலே !
வேண்டும் இடத்தில் இருப்பதில்லை
தீண்டா மனிதர் யாருமில்லை
மீண்டும் மீண்டும் நீயும்தான்
வேண்டாயிடத்தில் சேர்கின்றாய் !
பசிக்கும் வயிற்றைப் பார்ப்பதில்லை
புசிக்கும் நாக்கை அடைகின்றாய்
கசியும் மனமே உடையோரில்
வசிக்க நீயேன் தயங்குகிறாய் !
கஞ்சத்தனமே உறையிடத்தில்
பஞ்சமின்றி உறங்குகிறாய்
வஞ்சம் வளர்க்கும் குணத்திடமே
தஞ்ச னவே நிற்கின்றாய் !
ஆகா காரியம் நீயிருந்தால்
ஆகும் காரியம் ஆகிடுமே
போகாஇடமும் போய்நிற்கும்
சாகா வரமோ பெற்றிட்டாய் !
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.