தேர்தல் நாடகம்
திடுமெனக் கூடும் கரிசனம்
தேர்தல் திருவிழா நாடகமே...
அடுப்புடன் அரிசிப் பானையும் பணமும்
ஆசையைத் தூண்டிடுமே...
கடுப்புடன் இருந்த மக்களும் எதனால்
கனிந்தே போயினரோ...
உடுப்பையும் குடிக்க மதுவுடன் புலாவும்
உண்ணவே தந்தனரோ...
வாக்குகள் கேட்க மட்டுமே நமது
வாசலில் வந்திடுவர்!
நாக்கினில் ஊறும் வார்த்தைகள் தன்னை
நயம்பட பேசிடுவர்!
வாக்குகள் அதிகம் பெற்றதும் நம்மை
வணங்கியே தவிர்த்திடுவர்!
போக்குகள் காட்டி பொய்யென சிரித்து
போதையில் ஆடுவாரே!
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.