இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

இலக்கியங்கள் கூறும் வீரம்


அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
     அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
     அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்
தகவுடனே களவுதனில் காண வைத்துத்
     தகுதியுடன் கற்பினிலே இணைய வைத்தார்
முகம்மார்பில் விழுப்புண்கள் பெற்றவர் தாம்
     முழுவீரர் எனப்புகழ்ந்தே உச்சி மோந்தார் !

காதலுக்கு இலக்கணத்தை வகுத்த போன்றே
     கனல்கின்ற போருக்கும் நெறி வகுத்தார்
மோதலுக்குச் செலும் முன்பு ஊரிலுள்ள
     முதியோர்கள் நோய்யுற்றோர் குழந்தை பெண்கள்
சாதலுகே ஆளாக நேரு மென்று
     சாற்றியவர் வெளியேறிச் சென்ற பின்பே
தீதன்னை விழியேற்ற வீரரெல்லாம்
     திண்தோளால் நேர்க்கு நேராய்ப் போர்செய்தார்கள் !

வெட்சிக்குப் பின்கரந்தை வஞ்சிக்குப் பின்
     வெறியோடு வரும்பகையைத் தடுக்கும் காஞ்சி
நெட்டுயர்ந்த மதில்காக்கும் நொச்சிக்குப் பின்
     நெடுமதிலை வளைத்துப் போர்செய்யும் உழிஞை
எட்டி நின்று பார்த்திட்ட வீரரெல்லாம்
     எதிரெதிரே வாள்சுழற்றி மோதும் தும்பை
வெட்டிமுகம் மார்பினிலே விழுப்புண் பெற்று
     வெற்றிபெறும் வாகையென நெறி வகுத்தார் !

கோட்டையினைச் சுற்றி பெரும் அகழியோடு
     கொடும் விலங்கு உலவுகின்ற காவற்காடும்
கோட்டையின் மேல் அம்பெய்யும் எந்திரங்கள்
     கொத்துகொத்தாய்க் கல்லெறியும் கவணை வைத்தும்
நீட்டியுடல் அறுக்கின்ற பொறிகளோடே
     நீள்கழுத்தை திருகும் ஐயவிதுலா வைத்தும்
நோட்டமிடும் கண்களினைத் தாக்கிக் குத்தி
     நோய்செய்கிச் சிலிவைத்தும் காவல் காத்தார் !

போர்க்களம் தான்செலும் முன்பு வீரரெல்லாம்
     பொருதுபகை வென்றிடுவோம் என்றே ஒன்றாய்ச்
சேர்ந்து நின்று வஞ்சினந்தான் உரைப்பதோடு
     செற்றார்முன் தோற்றாலோ மனைவி விட்டும்
ஊர்விட்டும் உறவைவிட்டும் செல்வோ மென்றும்
     ஊர்மக்கள் இழிவாகத் தூற்றி எம்மின்
நேர்நின்று உமிழ்க வென்றும் முழக்கமிட்டே
     நெஞ்சுயர்த்திக் களம் புகுவர் அச்சமின்றி !

போர்க்களத்தில் தன்தந்தை வீழ்ந்த பின்பு
     போர் செய்ய கணவனையே அனுப்புகின்றாள்
மார்பினிலே பாய்ந்து வந்த அம்பு தைத்தும்
     மண்காக்கப்பகை வீழ்த்திக் கணவன் வீழப்
போர் செய்யப்பால் முகத்துக் குழந்தை தன்னைப்
     போர் வீரம் மரபுவழி உள்ளதென்றே
ஊர்தடுத்தும் உறவுகள்தாம் தடுத்த போதும்
     உச்சிமோந்தே அனுப்புகிறாள் மகனைத் தாய்தான் !

விளையாட்டுப் பிள்ளையினைப் போர்க்களத்தில்
     விளையாட அனுப்பிட்ட தாயிடத்தே
இளையோன்தன் முதுகினிலே அம்பு தைத்தே
     இறந்திட்டான் எனவந்து யாரோ சொல்ல
வளையாத மறத்திற்குப் பாலை ஊட்டி
     வளர்த்திட்ட என்மார்பை அறுப்பேன்; அம்பு
துளைத்திட்ட முதுகோடே இருந்தால் என்றே
     துடித்தெழுந்தே வஞ்சினந்தான் கூறுகின்றாள் !

நேர்சென்று போர்க்களத்தில் வீழ்ந்திருக்கும்
     நெடுந்தோள்கள் மறவரிடை தேடுகின்றாள்
பேர்சொல்லும் மகனாகப் போர்க்களத்தில்
     பெருமையுடன் மார்பினிலே அம்பு தைத்தே
ஊர்மெச்ச வீழ்ந்திருந்த மகனைக் கண்டே
     உனைப்பெற்ற போதடைந்த மகிழ்வின் மேலாய்ச்
சீர்பெற்றார் போல்உவகை அடைந்தே னென்றே
     சிறப்புற்றாள் மகனிறந்த துயர் மறந்தே !

வீரமுடன் அரசவையில் நீதிக்காக
     வீசிட்டாள் கண்ணகியாள் சொல்லின் அம்பை
தீரமுடன் எதிர் கொள்ள இயன்றிடாமல்
     தீங்கிழைத்த பாண்டியனோ உயிர் துறந்தான்
சேரனவன் கண்ணகிக்குச் சிறப்பு செய்யச்
     சென்று வடஅரசர் தம்முடிகள் வென்று
தாரணிந்தே இமய வெற்பில் கல்லெடுத்துத்
     தகுகோட்டம் அமைத்தின்றும் புகழில் உள்ளான் !

ஆயிரமாம் யானைகளைப் போர்க்களத்தில்
     ஆர்த்தழிக்கும் வீரன்மேல் பாடும் நல்ல
பாயிரம்தான் பரணியெனும் வீர நூலாம்
     பார்வியக்கக் கலிங்கத்துப் போரில் சோழன்
ஆயிரமாம் யானைகளைக் கொன்று முன்னோர்
     ஆண்ட தமிழ் வீரத்தைப் பதித்ததாலே
வாயினிக்கச் செயங் கொண்டார் பாடித் தந்த
     வரலாற்றுக் களஞ்சியந்தான் கலிங்கப் பரணி !

சாயாத கோபுரத்தைக் கட்டி வைத்தே
     சரித்திரத்தில் நின்றிருக்கும் இராசராசன்
சேயாக உதித்திட்ட இராசேந்திரன்தான்
     செப்பரிய வெற்றிகளால் புகழைப் பெற்றான்
வாயாரப் போற்றுமாறு கங்கை வென்றான்
     வங்கத்தில் சென்றிலங்கை கடாரம் வென்றான்
ஓயாமல் கடல்கடந்து நாடு வென்ற
     ஒப்பற்ற தமிழ் மன்னன் இவனேயன்றோ !

தொல்காப்பியப் புறத்தில் உரைத்தவாறு
     தோள்களாலே வெற்றிகளைப் பெற்றோர் தம்மைக்
கல்வெட்டில் மெய்கீர்த்தி என்றே மன்னர்
     களம்வென்ற வீரத்தைப் பொறித்து வைத்தார்
நல்வெட்டாய் வென்றிட்ட நாடுகள் தம்
     நற்பெயரைப் பட்டியலாய்ச் செதுக்கி வைத்தார்
சொல்வெட்டால் யார்யாரை வென்றார் என்று
     செப்புகின்ற பட்டங்கள் சொல்லி வைத்தார் !

வீரத்தில் விளையாடி விழுப்புண் பெற்று
     விண்சென்ற மறவர் தம்சிறப்பை யெல்லாம்
ஊரவர்கள் அறிவதுடன் சந்ததிக்கே
     உணர்த்துதற்குப் பெயரோடு பீடு சொல்லி
வேரவர்கள் இனத்திற்கே என்று போற்ற
     வெட்டி கல்லில் நடுகல்லாய் வைத்ததாலே
பாரதனில் நம்முன்னோர் வீரம் தன்னைப்
     பாராட்டி வியப்போடு வணங்குகின்றார் !

அகம் புறமாம் நானூறு பதிற்றுப்பத்து
     ஆயிரமாம் யானை வென்ற பரணியோடு
தகவான கலம்பகமும் அவ்வைத் தூதும்
     தருவெண்பா புறப்பொருளாம் மாலையோடு
திகழ்சோழர் மூவருலா காப்பியங்கள்
     தித்திக்கும் முத்தொள்ளாயிரமும் வீரப்
புகழ்பாடும் இலக்கியங்கள் ! தமிழர் அன்று
     புவிவென்றே ஆண்டதற்குச் சாட்சியாகும் !

இலக்கியங்கள் படிக்காமல் வீரமின்றி
     இருக்கின்றார் தமிழரின்று! மானம் கெட்டே
உலகாண்ட தமிழரின்று சொந்தமாக
     ஊர்கூட இல்லாமல் அலைகின்றார்கள்
நிலமின்றி ஏதிலராய் ஈழத்தமிழர்
     நிலமிருந்தும் அடிமையராய்த் தமிழகத்தில்
குலமானம் வீரமுடன் மீண்டும் முன்னோர்
     குடிப்பெருமை பெறுவதற்தே எழுவோம் வாரீர் !

- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/verse/p2936.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License