ஒளிவுமறைவுமின்றி வாழ்ந்திடு!
கனவின் கைகோர்த்தபடி
நடத்தல் சிரமம்தான்.
வெளிச்சத்தில்
தொலைத்த நிழலை
இருட்டில் தேடிப்பிடிப்பது
சாத்தியமில்லை.
கிளைகளில் ஈரம்
அற்றுப் போய் இருப்பினும்
எப்போதும்
வேர்களுக்கடியில்
மண் காத்திருக்கும் ஈரம்.
நிர்ப்பந்தம்
இறுகப்பற்றிய நிலையில்
தன்னிலைத் தெளிநிலைச்
சுயம் உணர்த்திடும்.
கோபுரம் நின்றிருப்பதாலே
உச்சியில் மேலும்
உயர்ந்து நிற்கிறது கலசம்.
நதி உறிஞ்சிய மீதமே
நதியில் ஓடும் வெள்ளம்.
உன் அர்த்தமுள்ள வாழ்வை
எவ்வித ஒளிவுமறைவுமின்றி
வாழ்ந்திடு
இதுவே பிறப்பின் நிதர்சனம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.