சித்திரம் பேசுதடி
காலத்தைவென்றுநிற்கும்மல்லப்பாடி
கற்பாறைகுகையொளிரும்சித்திரங்கள்
ஞாலத்தின்மூத்தகுடிதமிழர்என்னும்
ஞாயத்தைப்பேசுகின்றஆவணங்கள்
கோலத்தைக்கண்டின்றும்வியந்துபோகக்
கொலுவிருக்கும்பல்லவர்தம்மாமண்டூரும்
சீலமுடன்மாமல்லபுரத்திருக்கும்
சித்திரமும்தமிழ்க்கலையின்பெருமைபேசும் !
பனைமலையின்கோவில்தம்சுவரில்காணும்
பசும்வண்ணக்கந்தர்வர்சித்திரங்கள்
வனைந்திருக்கும்காஞ்சிக்கைலாசநாதர்
வாழ்கோயில்சோமாசின்சித்திரங்கள்
நினைவிருந்தேஅகலாமல்கண்ணுக்குள்ளே
நிற்குதஞ்சைபெருங்கோயில்சித்திரங்கள்
புனைந்திருக்கும்மதுரைமீனாட்சிகோயில்
புகழோவியங்கள்நம்கலையைப்பேசும் !
சித்தன்னவாசல்தம்சித்திரங்கள்
சித்தத்தைமயக்குகின்றஅற்புதங்கள்
வித்தையினைக்குளமாக்கிஎருமையானை
விளையாடஅன்னங்கள்பறந்துசெல்லச்
சத்தத்தைக்கேளாமல்துறவிமூவர்
சாய்ந்துமலர்பறிக்கின்றகாட்சியெல்லாம்
இத்தரையில்தமிழர்தம்கலைமேன்மையை
இயம்புகின்றபலவண்ணசொற்களன்றோ !
(மல்லப்பாடி- தொன்மையானபாறைஓவியங்கள்உள்ளஇடம். விழுப்புரத்தின்அருகில்உள்ளஊர்பனைமலை)
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.