செய்யாத பிழை
என்னால் நிகழ்ந்த
பிழையென்று அவர்களின்
வசைச் சொற்களுக்கு
ஆளாகிறேன்.
அவர்கள் பிழையென்று
கருதும் பிழை என்னிடத்தில்
எதிர்பாராமல் கூட
நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
என்னிடம்
வருவதற்கு முன்னமே
அந்தப் பிழை அவர்களின்
கவனமின்மையால்
நிகழ்ந்து முடித்திருக்கலாம்.
அப்படி நிகழ்வதற்கு
வாய்ப்புகள் நிறையவே உண்டு
அதுதான் உண்மையும் கூட.
உங்களிடம்
ஒன்றை மட்டும்
நான் சொல்லிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.
அவர்கள் பிழையற்றவர்கள்
என்பதை மெய்ப்பிப்பதற்காகவே
நான் செய்யாத பிழையை
என்மேல்
வலியத் திணிக்கிறார்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.