சக்கரம்தான் வாழ்க்கை
சக்கரம்தான்வாழ்க்கையிங்கேசுழலுகின்ற
சக்கரம்போல்இரவுபகல்வந்துபோகும்
அக்காலம்தொட்டுநம்மின்வாழ்க்கைதன்னில்
அதுபோன்றேஇன்பதுன்பம்கலந்திருக்கும் !
முக்காலம்உணர்கின்றமுனிவர்கூட
முனிவுகொண்டுதுன்பத்தைக்கொடுக்கின்றார்கள்
தக்கபடிஅதுபோக்கும்வழியும்கூறித்
தருகின்றார்இன்பத்தைமனம்குளிர்ந்தே !
துன்பமொன்றேவாழ்க்கையெனில்சோர்வேமிஞ்சும்
துயரமின்றிஇன்பமெனில்சலிப்பேவிஞ்சும்
இன்னலையும்இன்பமெனஏற்றுக்கொண்டால்
இனிதாகும்வாழ்க்கையிங்கேவிரக்திவாரா !
அன்பானஅன்னையுமேகுழந்தைதன்னை
அடிப்பதெல்லாம்நல்லொழுக்கம்கற்பதற்கே
துன்பமிங்கேவருவதுவும்வாழ்க்கைதன்னை
தூய்மையாக்கிநல்வழியில்செலுத்துதற்கே !
கதிரொளியின்அருமையினைக்கங்குல்காட்டும்
காண்கின்றஇன்பத்தின்அருமைதன்னை
மிதிக்கின்றதுன்பம்தான்எடுத்துக்காட்டும்
மீள்வோர்க்கோஇன்பதுன்பம்சமமாய்த்தோன்றும் !
புதிதன்றுதூங்குவதுபோல்தான்துன்பம்
புலர்காலைஎழுவதுதான்இன்பமாகும்
புதிராகமாறிவரும்இன்பதுன்பை
புரிந்துகொண்டால்வெற்றியுடன்வாழ்வர்நன்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.