தகவல் களம்
என்னிடம்
ஒரு தகவலைப் பரிமாறுகிறாய்.
அத்தகவலைப் பிறரிடம்
சொல்லலாமா வேண்டாமா
எனும் குழப்பத்தில்
இருக்கும் போதே
அடுத்தொரு
தகவலைத் தருகிறாய்.
அது அடுத்தவரிடம் பகிரக் கூடிய
தகவலாக இருக்கிறது.
மீண்டுமொரு
தகவலைத் தருகிறாய்
அதுவும் அனைவரிடமும்
பகிரக் கூடிய செய்தியாக
இருக்கிறது.
அதற்கடுத்து உன்னிடமிருந்து
வந்த தகவல்
பிறரிடம் சொல்லக் கூடிய
தகவலாக இல்லை.
அடுத்தாக வந்த தகவலும்
முதல் தகவலைப் போலவே
இழுபறியில் இருக்கிறது.
போதும் போதும்
உன் தகவல் பரிமாற்றத்தை
இத்துடன் நிறுத்திக் கொள்.
இனியந்த யுத்தக்களத்தில்
தனியொருவனாய்
என்னால் போராட முடியாது!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.