கவிஞர் பா. தென்றல்
காரைக்குடியிலுள்ள ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் எழுதிய .உயிர் பருகும் மழை (கவிதைத் தொகுப்பு), நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக்கொடு (கட்டுரைத் தொகுப்பு), வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும் (கட்டுரைகள்) எனும் மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ் பல கட்டுரைகளைத் தொடங்கியிருப்பதுடன், பல்வேறு தொகுப்புகளையும் செய்திருக்கிறார். புதிய தேசிய கல்விக் கொள்கை, கன்னடக் கவிதைகள், தேசிய அறிவியல் திறனறித் தேர்வுக்கான ஆங்கில நூல்கள் உள்ளிட்ட மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்து வருகிறார். இவர், தேவதைகள் கூட்டம் எனும் அமைப்பை நிறுவி, அதன் வழியாக குழந்தைகள் திறன்களை வெளிப்படுத்தும் களமாக மாதந்தோறும் தன் வீட்டில் "தேவதைகள் கூட்டம்" என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். திருப்பூர் சக்தி விருது, தினமலர் இலட்சிய ஆசிரியர் விருது, கல்விச்செம்மல், கலைச்சுடர், சிறந்த ஆசிரியர், நிலாச்சுடர் விருது, சிகரம் தொட்ட ஆசிரியர், ஒளிரும் ஆசிரியர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
*****
கவிதை - மொழிபெயர்ப்புக் கவிதை
கன்னடத்தில்:
கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி
கன்னடத்தில்:
கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.